தூத்துக்குடி,ஜூன் 25- தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர குரும்பூர் கிளை உள்ளது. இதில் நாலுமாவடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பிர பாகரன் வங்கி தலைவராக உள்ளார். சேதுக்கு வாய்த்தானை சேர்ந்த ஜெயசிங் கிறிஸ்டோபர் மேலாள ராகவும், குரும்பூர் அருளானந்த புரத்தை சேர்ந்த ராஜசேகர் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளனர். இந்த வங்கியில் நகைகளை ஆய்வு செய்தபோது 869 பேர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த நகைகளை சோதனை செய்த போது, 869 நகை பைகளில் 36 பைகளில் 388 சவரன் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலி நகைகளை கொண்டு ரூ.1 கோடியே 6 லட்சம் கடன் பெற்றது தெரியவந்தது. இது தணிக்கை செய்த அதிகாரிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் லதா, துணை பதிவாளர் சந்திரா, சார்பதிவாளர் பொன்செல்வி ஆகி யோர் கடந்த 2 நாட்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் அவரது நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் 36 பேரில் வங்கி கணக்குகளில் சுமார் 388 சவரன் போலி தங்க நகை களை அடகு வைத்து ரூ. 1.06 கோடி மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி தலைவர் பிரபாகரன், மேலாளர் ஜெயசிங் கிறிஸ் டோபர், காசாளர், நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் ஆகியோரிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை கொண்டு மோசடி யாக பணம் பெற்றதை ஒத்துக் கொண்டார். மேலும் இந்த பணம் முழுவதையும் உடனடியாக வங்கியில் செலுத்தி விடுகிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக நகை மதிப் பீட்டாளர் ராஜசேகர் ரூ.50 லட்சத்தை வங்கியில் ரொக்கமாக செலுத்தி னார். ரூ.49 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். பாக்கி 7 லட்சத்திற்கு வங்கி ஊழியர்களின் பி.எப். பணம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.