states

img

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 967 குடும்பங்களுக்கு தற்காலிக வீடு

கல்பற்றா, ஆக.24- பேரிடரால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மக்களை கேரள அரசு போர்க்கால வேகத்தில் கரம்பிடித்து உயர்த்தியது. 19  நிவாரண முகாம்களில் இருந்த  967 குடும்பங்கள் வாடகை வீடு கள் மற்றும் அரசு குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டன. தற் போது முகாமில் 16 குடும்பங் கள் மட்டுமே உள்ளன. அவர் களுக்கான வீடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. 27ஆம் தேதிக் குள் மறுவாழ்வு பணிகள் நிறை வடையும். வீடுகளுக்கு மாத வாட கையாக ஆறாயிரம் ரூபாய்  அரசே செலுத்தும். உறவினர் வீடு களுக்கு மாறியவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்கும்

பேரிடர் ஏற்பட்ட ஜூலை 30ஆம் தேதி முதல் நான்கு அமைச் சர்கள் அடங்கிய உப குழு  மாவட்ட மட்டத்தில் செயற்பாடு களை ஒருங்கிணைத்து வரு கின்றது. காணாமல் போன வர்களின் மீட்பு, தேடுதல் மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகள் வேகமாக நடந்தன. இதுவரை ரூ.6 கோடிக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அவசர உதவியாக 10,000 ரூபாயும், இறந்தவர்களைச் சார்ந்தவர்களுக்கு 6 லட்சம் ரூபா யும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருவருக்கு ஒரு மாதத் திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.300  வாழ்வாதார உதவித் தொகையும் தொடங்கப்பட்டுள்ளது. 539 குடும்பங்களைச் சேர்ந்த 1078  பேருக்கு இந்தத் தொகை ஒப்படைக்கப்பட்டது. படுகாய மடைந்த 28 பேருக்கு 17 லட்சம்  ரூபாய் வழங்கப்பட்டது. நிலச்சரிவு பகுதிகள், சாலியாறு மற்றும் நிலம்பூர் வரை கடற் கரை பகுதிகளில் 26 நாட்களாக தேடுதல் நடக்கிறது. உடலை அடையாளம் காணும் டிஎன்ஏ சோதனை முடிந்துள்ளது. கிராஸ் மேட்சிங் இறுதி கட்டத்தில் உள்ளது.

சேதமடைந்த வெள்ளார் மலை அரசு தொழிற்கல்வி மேல்நிலை மற்றும் முண்டக்கை அரசு எல்.பி பள்ளி மற்றும் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கான நட வடிக்கைகள் நிறைவடைந் துள்ளன. 878 பேருக்கு 1162  சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டன.  பல்வேறு நிறுவனங்களின் பங்க ளிப்புடன் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக மேப்பாடியில் வெள்ளி யன்று (ஆக.23) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் மூலம்  59 பேருக்கு வேலை வழங்கப் பட்டது. 127 பேர் கொண்ட தேர்வுப்  பட்டியல் தயாரிக்கப்பட்டது

விரிவான மதிப்பீடு

வயநாடு முண்டக்கை நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வர்களின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதி யின் மறுசீரமைப்பு ஆகிய வற்றை இலக்காகக் கொண்ட பேரிடருக்குப் பிந்தைய தேவை கள் மதிப்பீடு (பிடிஎன்ஏ) ஆக.26 திங்களன்று தொடங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), தேசிய  பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) மற்றும் பிற நிறுவ னங்களுடன் இணைந்து மாநில அரசு நடத்தும் இத்திட்டம் வரும்  31ஆம் தேதி வரை தொடரும்.  என்டிஎம்ஏ குழு ஞாயிற்றுக் கிழமை கோழிக்கோடு சென்ற டையும். செயல்பாடுகள் சமூகத்  துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மையை முதன்மை செயலர் மேற்பார்வை யிடுவார். மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பி னர் செயலாளர் டாக்டர். சேகர் குர்யாகோஸ் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளை வய நாடு கலெக்டர் டி.ஆர்.மேகஸ்ரீ  மேற்பார்வையிடுவார். பேரழி வின் தாக்கம் மதிப்பிடப்பட்டு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள்  வகுக்கப்படும். திட்டச் செலவுகள் மற்றும் முடிப்பதற்கான காலக்கெடுவை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை தயா ரிக்கப்படும். இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்ச கத்தின் ஒப்புதலுக்காக சமர்ப் பிக்கப்படும்.

புதிய நம்பிக்கையுடன்…

அம்பிளிமடத்திலுள்ள வீடு தரையையும் சேர்த்து அடித்துச் செல்லப்பட்டாலும் சுமித்ராவின் நம்பிக்கை வீண் போகவில்லை. வலியிலும் வேதனையிலும் அரசு கவனித்து வந்த சில நாட்களில் மேப்பாடி நிவாரண முகாமில் இருந்து வௌக்கிமலையில் உள்ள வாடகை வீட்டிற்கு நடந்து சென்றனர். சோகம் ஒரு சிறு புன்னகையை தந்தது. அவர்கள் ஒரு புதிய கூரையின் கீழ் ஒரு புதிய வாழ்க்கையை கனவு காண்கிறார்கள்.

“அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் கொடுக்கப்பட்டது. மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய நீரில் கணவர் அடித்து செல்லப்பட்டார். வாடகை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கட்டில், அலமாரி, மேசை இருந்தது. எரிவாயு, அடுப்பு மற்றும் பாத்திரங்கள் கிடைத்தன. உணவுக்கு பஞ்சமில்லை. இவ்வளவு சீக்கிரம் வீடு மாறுவேன் என்று நினைக்கவில்லை. நூறுநாள் வேலையில் தொழிலாளியான சுமித்ரா தலை சாய்க்க இடம் கிடைத்த நிம்மதியில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் அரசு குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளுக்கு மாறியுள்ளனர். வாகனங்களில் நிரப்பப்பட்ட சரக்குகளுடன் அனைவரும் தங்கள் வீடுகளை அடைந்தனர். அவர்களுக்கு முகாமில் இருந்து ‘பேக் டு ஹோம் கிட்’ வழங்கப்பட்டது. தளவாடங்கள், தங்குமிடம், சமையலறை, சுத்தம் மற்றும் சுகாதார கருவிகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன; அளவிடுவதற்காக செய்யப்பட்ட ஆடைகள், மிக்சி, குக்கர், பாத்திரங்கள், பக்கெட், போர்வை, சோப்பு, விளக்குமாறு, பை, மசாலா பொருட்கள், பாத்திரங்கள், பாய் என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன.

இவ்வளவு குடும்பங்களை குறைந்த கால அளவில் மறு குடியமர்த்தல் நாட்டின் வரலாற்றில் முதல் நிகழ்வாகும் என வருவாய்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார். இதன் தொடர் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு உதவி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.