states

img

கம்யூனிஸ்ட் இயக்க முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வயது 99

திருவனந்தபுரம், அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வரும், கேரள முன்னாள் முதல் வருமான வி.எஸ். அச்சுதானந் தன் அக்டோபர் 20 வியாழனன்று தமது 99வது அகவையை எட்டி னார். எனினும் அவரது பிறந்த நாளையொட்டி சிறப்புக் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் பார்டன்ஹில்லில் உள்ள தனது மகன் வி.ஏ.அருண்குமாரின் வீட்டில் வி.எஸ் என்று அழைக்கப்படும் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஓய்வெடுத்து வருகிறார். நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரு மான வி.எஸ்., கேரளாவின் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப் பேரவை உறுப்பினர், நிர்வாகச் சீர்திருத்த ஆணையத் தலைவர், சிபிஎம் அரசியல்  தலைமைக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர், தேசாபிமானி நாளிதழ் ஆசிரியர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். இவர் 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஆலப்புழாவில் உள்ள புன்னப்புரா வெண்டலத்தராவீட்டில் சங்கரன் மற்றும் அக்கம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 1940இல் தனது பதினேழாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பழம்பெரும் புன்னப்புரா வயலார் போராட்ட நாயகன் வி.எஸ்.அச்சுதானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.