கோழிக்கோடு, பிப்.25- கேரள வளர்ச்சியின் தெளிவான சித்தி ரத்தை படம்பிடித்துக் காட்டியபடி சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையிலான மக்கள் பாதுகாப்பு அணி வகுப்பு அலைகடலென திரளும் மக்களின் அன்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரளம் என்கிற சிறிய மாநிலம் அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன் னுதாரணமாக வளர்ந்திருப்பதையும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆளுமை குறித்த அவரது உரைகள் பெரும் கரவொலி யோடு மக்களால் அங்கீகரிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு பல்வேறு வகைகளில் மாநிலத்தின் கழுத்தை நெரித்து வருகிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் இலக்குகளை நோக்கி முன்னேறுகிறது அரசு. இதற்கு உறு துணையாக இருப்பதற்கான அழைப்பை யும் இந்த பயணம் விடுத்து வருகிறது. உம் மன் சாண்டி முதல்வராக இருந்தபோது கை விடப்பட்ட திட்டங்களுக்கு, ரூ.6500 கோடி மதிப்பிலான நிலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம் கேரளத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியமாக வேண்டிய வளர்ச்சி இப்போதே ஏற்படும் என்பதை மக்களிடம் விளக்குகிறது இந்த அணிவகுப்பு. முக்கம், கொடுவள்ளி, பாலுசேரி, பேராம்ப்றா என ஒவ்வொரு இடத்திலும் பத்தாயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டு வரவேற்பு அளித்தனர்.
30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: எல்டிஎப் அரசின் இலக்கு
கோழிக்கோடு, பிப்.25- இரண்டாவது பினராயி விஜ யன் அரசின் முக்கிய நோக்கம் வேலை யில்லாத் திண்டாட்டத்தை தீர்ப்ப தாகும். 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று எல்டிஎப் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள் ளது. இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாகவும் மேலும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். கோழிக்கோடு மாவட்டத்தின் பல்வேறு மையங்களில் மக்கள் பாது காப்பு அணிவகுப்புக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அவர் பேசியதாவது: மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் தொழில்முனைவோரை கண்டுபிடிக்க அரசு இலக்கு நிர்ண யித்துள்ளது.
தற்போது 1,32,000 பேர் பதிவு செய்துள்ளனர். இது ஒன்றரை லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. பெயர் விவரம் மார்ச் மாதம் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு அதிக தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள். ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைவதில்லை. வெற்றி பெறாதவர்கள் வேறு வழி களைத் தேடுவார்கள். இத்துறையில் குறைந்தது 5 லட்சம் பேர் நேரடியாக வும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். தொழிலதி பர்களில் முடிதிருத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பது மனோரமா வின் கண்டுபிடிப்பு. முடிதிருத்தும் வேலை மோசமானதல்ல. மனோ ரமா அவர்கள் மீது கோபத்தில் இருக்கி றதா என்பது தெரியவில்லை. முடி திருத்தும் வேலையின் வடிவம் மாறி விட்டது. அழகு நிலையங்களாக அவை மாறிவிட்டன. நூறு நாள் செயல்திட்டத்தின் போது புதிய வேலைவாய்ப்பு முயற்சி களுக்கு ரூ.15,800 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. 1200 திட்டங்களில் 4.33 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்பு களில் ஆயிரத்தில் 5 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். குடும்ப ஸ்ரீக்கு வட்டியில்லா கடன் வழங்கி லட்சக்கணக்கான நிறுவனங்கள் வளர்த்தெடுக்கப்படும். கேரளாவில் 53 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 29 லட்சம் படித்த வர்களுக்கு கேடிஐஎஸ்சி தலைமை யில் தொழில் பயிற்சி அளிக்கப்படும்.