சபரிமலை பக்தர்களுக்கான 24 மணி நேர ‘சபரிமலை வார்டை’ கோந்நி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார். ஆக்ஸிஜன் வசதி யுடன் கூடிய 30 படுக்கைகள் தவிர, கோவிட்டால் பாதிக்கப்பட்டு வீடு திரும்ப முடி யாதவர்களுக்கு 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். சபரிமலை வார்டு ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் கே.யு.ஜனீஷ்குமார் சனியன்று (நவ.19) ஆய்வு செய்தார். அவசர கண்காணிப்பு பிரிவு, இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உயிர்காக்கும் மருந்துகள், உயிர்காக்கும் கருவிகள் மற்றும் ஆய்வக சோதனைகள் போன்ற வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன. இது தவிர, மருத்துவர்கள், பணியாளர் செவிலியர்கள், துணை மருத்துவத் துறை மற்றும் உதவி யாளர்களின் 24 மணி நேர சேவையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். மரியம் வர்க்கி, துணை முதல்வர் டாக்டர் சேசி ஜோஸ், கண்காணிப்பாளர் டாக்டர். சி.வி.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜி.ஜி.சாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.