states

img

வயநாட்டில் மீண்டும் மழை: தற்காலிக பாலம் மூழ்கியது

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீண்டும் பெய்த கனமழையால் ஆற்றைக் கடப்பதற்காக ராணுவம் அமைத்திருந்த தற்காலிக பாலம் மூழ்கியது.

வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களில் ஜூலை 29 அன்று அதிகாலை பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த கொடூரமான நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், நேற்று சூரல்மலையில் மீண்டும் கனமழை பெய்தது.

நிலச்சரிவில் போது மீட்பு பணிக்காக சூரல்மலை, முண்டக்கை இடையே இருவழிஞ்சிப்புழா பகுதியில் ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் மூழ்கியது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பசு மாடு ஒன்றை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். முன்னதாக செம்பராமலை அடிவாரத்தில் வசித்து வந்த சுமார் 250 குடும்பங்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். அந்த கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.