இஸ்லமாபாத்,பிப்.19- பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது.இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரி கள் உட்பட அனைவரும் பொறுப்பு என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முமகத் அசிப் தெரிவித்துள்ளார். கடுமையான பொருளா தார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5 சத வீதமாக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியா வசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதி கரித்தது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், இறைச்சி 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் சவாலாக மாறி வரு கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமத் அசிப் பேசுகையில் , “பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள், அதி காரிகள் உட்பட அனைவரும் பொறுப்பு. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். நமது பிரச்சனை களுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது. பாகிஸ் தானின் பிரச்சனைகளுக்கு சர்வதேச நாணய நிதி யத்திடம் தீர்வு இல்லை” என்று தெரிவித்தார்.