states

img

நாடு முழுவதும் மின் பற்றாக்குறை: பாதிப்பின்றி சமாளித்தது கேரளம்

திருவனந்தபுரம், மே 13- நாடு முழுவதும் மின்பற்றாக்குறை தலைவிரித்தாடியபோது பாதிப்பின்றி நிலைமையை எதிர்கொண்டதாக கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தெரிவித்துள்ளார். பாலோடு, விழிஞ்ஞம் 110 கேவி துணை  மின் நிலைய கட்டுமான பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்த அமைச்சர் மேலும் கூறியதாவது: ஒரு  யூனிட் மின்சாரம் ரூ.20க்குகூட கிடைக்காத போதிலும் ஒரு நாளில் 15 நிமிடங்கள் மட்டுமே மின்தடையுடன் நிலைமையை சமாளித்தது கேரளம்.  66 கேவி பாலோடு துணை மின்நிலை யத்தில் இரட்டைச் சுற்று இணைப்பை நிறுவி 110 கேவி வோல்டேஜுக்கு உயர்த்து வது, புதிதாக 12.5 எம்விஏ சக்தி கொண்ட இரண்டு மின்மாற்றிகள் நிறுவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.  இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது நந்தியோடு, பெரிங்கமலை, பாங்ஙோடு, கல்லற, தொளிக்கோடு, விதுர,  பனவூர், சிதற, கடய்க்கல் போன்ற பஞ்சா யத்துகளில் சுமார் 12,000 நுகர்வோர் பயனடைய உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேம்பட்ட கிராஸ் இன்சுலேட்டட் சுவிட்ச்கி யர்  துணை மின்நிலையம் விழிஞ்ஞத்தில் நிறுவப்பட உள்ளது. முழுமையாக தானி யங்கி கட்டுப்பாடு அமைப்பின்படி செயல் படும் துணை மின்நிலையத்தில் 220/110 கேவியின் 20 எம்விஏ திறன் கொண்டதாக இரண்டு மின்மாற்றிகள் உள்ளன.