திருவனந்தபுரம், ஜன.4- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் வெள்ளி யன்று (ஜன.6) துவங்க உள்ளது. இதற் காக கேரளாவின் தலைநகர் தயார் நிலை யில் உள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் மாதர் சங்க அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. நாட்டின் 25 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிர தேசங்களில் இருந்து 96,31,116 உறுப்பி னர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகை யில் 850 பிரதிநிதிகள் வரை ஜனவரி 9 வரை நான்கு நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ள னர். திருவனந்தபுரம் தாகூர் தியேட்டர் (எம்.சி. ஜோசபின் நகர்) மற்றும் புத்தரிக் கண்டம் மைதானத்தில் (மல்லு ஸ்வராஜ் யம் நகர்) மாநாடு நடைபெறுகிறது. கலா மண்டலம் கல்பித பல்கலைக்கழக வேந்த ரும், பிரபல நடனக் கலைஞருமான மல் லிகா சாராபாய் வெள்ளியன்று பிரதிநிதி கள் மாநாட்டையும், முதல்வர் பினராயி விஜயன் 9 ஆம் தேதி பொது மாநாட்டை யும் துவக்கி வைக்கின்றனர்.
பெண்விடுதலைப் போராளி நங்கேலி போன்ற தியாகிகள் முதல் எம்.சி.ஜோச பின் போன்ற மறைந்த தலைவர்கள் வரை யிலான படங்களுடன் கூடிய பிரமாண்ட விளம்பரங்களும், சுசீலா கோபாலன், கே.ஆர்.கௌரியம்மா, விமலா ரணதிவே உள்ளிட்டோரின் பெயரில் 169 ஸ்தூபி களும் மாவட்டம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ளன. முன்னதாக புதனன்று (ஜன.4) மேம்பாலம் முதல் பாளையம் தியாகிகள் மண்டபம் வரை நடைபெற்ற மாநாட்டு அறிவிப்பு ஊர்வலத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாவட்ட எல்லைகளான தட்டாத்து மலை, கடம்பட்டுகோணம், பாறசாலை ஆகிய இடங்களில் அலங்கார வளைவு கள் வைத்துள்ளனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரச்சாரப் பாடல்கள் மற்றும் ‘தன்றேடம்’ (உறுதி) என்ற குறும்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அய்யன்காளி மண்டபத்தில் நடக்கும் “திரிஷ்யபூமிகா” வரலாற்றுக் கண்காட்சி மற்றும் பல பகுதி களில் நடக்கும் கருத்தரங்குகளில் ஏராள மானோர் கலந்து கொள்கின்றனர். ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துடன் மாநாடு நிறைவடைகிறது. சுடர்ப் பயணம், கொடி ஊர்வலம் அகில இந்திய மாநாட்டையொட்டி சுடர், கொடி, கொடிமரம் ஊர்வலம் வியா ழனன்று நடைபெறுகிறது. கரமனா எஸ். சாரதாம்மா நினைவு மண்டபத்தில் டாக்டர் டி.என்.சீமா கொடி ஏற்றுகிறார். வாழ முட்டம் தியாகிகள் மண்டபத்தில் தியாகி கள் சுடரை சி.எஸ் சுஜாதாவும், மருத்து வக் கல்லூரி தேவகி வாரியர் நினைவு மண்டபத்தில் கொடிமரத்தை என். சுகன்யாவும் பெற்றுக் கொள்கிறார்கள்.