மலையாள திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பல அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நீதிபதி ஹேமா குழுவுக்கு மலையாள நடிகர் சங்கம் வரவேற்பு.
கேரள அரசு கடந்த 2017ஆம் ஆண்டு திரைத்துறையில் பெண்களின் பணிச்சூழல் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்தது. தற்போது அந்த ஆணையமானது திரைத்துறையில் பெண்கள் பட வாய்ப்புகளுக்காக பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மலையாள நடிகர் சங்கம் இந்த குழுவின் அறிக்கைக்கு வரவேற்பு அளித்துள்ளது.