states

ஒன்றரை ஆண்டுகளில் 1752 ஏக்கர் நிலம்:

திருவனந்தபுரம், ஜன.30 - கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி அரசு மே 2021 முதல் டிசம்பர் 31 2022 வரை ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 1,752 ஏக்கர்  நிலத்தை பழங்குடியினருக்கு வழங்கியுள்ளது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் 1369 பேருக்கு 1699 ஏக்கரும், நில வங்கித் திட்டத்தின் கீழ் 198 பேருக்கு 38.01 ஏக்கரும், ஒதுக்கப்பட்ட வன நிலம் 15.20 ஏக்கரும் வழங்கப்பட்டது. பழங்குடியினருக்கு நிலம் வழங்க ஆதிவாசி மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு இயக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிலமற்றவர்கள் இல்லை. அட்டப்பாடி, கண்ணூரில் பணம் கொடுத்து நிலம்  வாங்கும் நில வங்கி திட்டம் தொடங்கப்பட வில்லை. முத்தங்ஙா நிலப் போராட்டம் முத்தங்ஙா நிலப் போராட்டத்தில் கலந்து  கொண்ட 242 குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. மேலும் 39  குடும்பங்களுக்கு நிலம் வழங்க வேண்டி யுள்ளது. அனைத்து பழங்குடியின குடும்பங் களுக்கும் நிலம் வழங்கும் திட்டத்தில் கேரள அரசு முன்னேற்றம் கண்டு வருவதாக அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார். மேலும், பல்வேறு திட்டங்கள் உரு வாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கிறது. பழங்குடியினரின் நிலம் பறிக்கப் படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.