states

img

14 லட்சம் குடும்பங்கள் பயனடைய வேலை உறுதி திட்ட தொழிலாளர் நல நிதியம்

திருவனந்தபுரம், மே 15- வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தி லும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு பலனளிக்கும். நாட்டிலேயே முதன்முறையாக இந்த தொழிலாளர்களுக்கு என நலநிதியம் உருவாக்கப்படுகிறது. ஓய்வூதி யம், திருமண உதவித்தொகை, படிப்பு உதவி உள்ளிட்டவை இதில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் நலனையும் இந்த நலநிதியம் உறுதி செய்கிறது. வேலை உறுதித் திட்டங்களில் அங்கம் வகிக்கும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலநிதியத்தின் மூலம் பயனடை வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நல நிதியத்தின் தொடக்கவிழா திங்களன்று (மே 15) பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடை பெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி  வைத்தார். உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தலைமை வகித்தார். அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு அமலாகும் 100 நாள் செயல்திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அய்யங்காளி நகர்ப்புற  வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த வர்கள் நலநிதியில் உறுப்பினராக சேர்க்கப்படு வார்கள். பதிவு செய்த தொழிலாளி செலுத்தும் மாதாந்திர பங்கான ரூ.50க்கு  இணையான தொகை அரசால் நலநிதி யத்துக்கு வழங்கப்படும். இந்த தொகை ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் பிற நலப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டோரும் 55 வயதுக்கு உட்பட்டோரும் உறுப்பினராகலாம். விண்ணப் பித்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய  இரண்டு வருடங்களில் ஏதேனும் ஒரு வருடத்தில் குறைந்தது 20 நாட்கள் வேலையில் ஈடுபட்டவர்கள் உறுப்பினராகலாம்.

நல நிதியின் பலன்கள்

60 வயது வரை தொடர்ந்து பங்களிப்பு செலுத்திய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் பங்களிப்பு செலுத்திய உறுப்பினரின் இறப்புக்கு குடும்ப  ஓய்வூதியம். நோய் அல்லது விபத்து காரண மாக ஒரு உறுப்பினர் இறந்தால் நிதி உதவி. வேலை செய்ய இயலாமை காரணமாக நிதி யத்தில் உறுப்பினர் நீக்கம் செய்யப்பட்டால், உறுப்பினர் செலுத்திய பங்களிப்பு நிர்ண யிக்கப்பட்ட வட்டியுடன் திரும்ப கிடைக்கும். தீவிரமாக நோய்வாய்ப்பட்ட உறுப்பினர்களின் சிகிச்சைக்கான நிதி உதவி. பெண் உறுப்பின ர்கள் மற்றும் உறுப்பினர்களின் மகள்களின் திருமணம் மற்றும் பெண் உறுப்பினர்களின் குழந்தை பிறப்புக்கு நிதி உதவி, உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கு நிதி உதவி கிடைக்கும். 2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டம் நாட்டில் நிறுவப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. பாலக்காடு மாவட்டம் அப்படிப்பட்ட மாவட்டங்களில் ஒன்று. இந்த பாலக்காட்டில்தான் நாட்டி லேயே முதல் வேலை உறுதித் தொழிலாளர் நல நிதி வாரியத்தின் திறப்பு விழா நடைபெறு கிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவும், திட்டத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும் முழுமையான சமூக தணிக்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. நகரங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அய்யங்காளி வேலை உறுதியளிப்புத் திட்டத்தைத் தொடங்கி நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா.

ஒன்றிய அரசின் நிதி குறைப்பு

இன்று, நாடு முழுவதும் 15.03 கோடி குடும்பங்களில் உள்ள 26.81 கோடி தொழி லாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள னர். ஆனால், இதில் வேலை செய்யும் தொழி லாளர் குடும்பங்கள் 9.55 கோடி. தொழி லாளர்கள் 14.29 கோடி. இவர்களில் 6.1 கோடி  குடும்பங்களைச் சேர்ந்த 8.76 கோடி தொழி லாளர்களுக்கு மட்டுமே கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கே சராசரியாக 47 வேலை நாட்கள் மட்டுமே கிடைத்தது. 36.01  லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே 100 வேலை நாட்கள் கிடைத்துள்ளன. 5.8 சதவீத குடும்பங் பளுக்கு மட்டுமே 100 வேலை நாட்கள் கிடைத்து ள்ளன. இத்திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல், தொடர்ந்து குறைத்து வருகிறது. 2020-21இல் இத்திட்டத்திற்கு 1,11,719 கோடி ஒதுக்கப்பட்டது. 2021-22இல் திட்டச் செலவு ரூ.1,06,489 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23இல் இது மேலும் குறைக்கப்பட்டு ரூ.1,01,038 கோடியாக இருந்தது. நடப்பாண்டு, ரூ.60,000 கோடியாக வெட்டி சுருக்கப் பட்டது. ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் உரிய நேரத்தில் வேலை வழங்குதல், ஊதியம் பெறுதல் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது வேலை நாட்களையும் மோச மாக பாதிக்கிறது. இது தவிர, ஒவ்வொரு ஊராட்சியிலும் மேற்கொள்ளும் பணிகளின் எண்ணிக்கையை குறைப்பது, ஆதார் அடிப்படையிலான கட்டணம், புதிய என்எம்எம்எஸ், பிஎஃப்எம்எஸ் போன்றவை திட்டத்தில் பல இடையூறுகளை உருவாக்கு கின்றன. கேரள அரசின் தொடர் தலையீட்டின் ஒரு பகுதியாக கேரளாவில் வேலை உறுதித் திட்டத்தை நாட்டிற்கு முன்மாதிரியாக செயல்படுத்த முடிந்துள்ளது.

இன்று மாநிலத்தில் 20.67 லட்சம் குடும்பங்களில் 24.95 லட்சம் தொழிலாளர்கள்  உள்ளனர். அவர்களில் 15.51 லட்சம் குடும்பங் களைச் சேர்ந்த 17.59 லட்சம் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் பய னடைந்துள்ளனர். சராசரியாக 63 வேலை நாட்கள் கிடைத்துள்ளன. 4.49 லட்சம் (29  சதவிகிதம்) குடும்பங்களுக்கு 100 நாட்களும் முழுமையாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டியல் பழங்குடியின குடும்பங்களுக்கு நாடு  முழுவதும் சராசரியாக 52 வேலை நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் கேரளாவில் 86 வேலை நாட்கள் வழங்கப்பட்டன. மேலும், பழங்குடி யின குடும்பங்களுக்கு 100 வேலை நாட்கள் தவிர, பழங்குடியினர் மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி 100 வேலை நாட்கள் முதல் 200 வேலை நாட்கள் வரை சேர்த்து நாட்டிற்கு முன்மாதிரியாக பழங்குடியினர் பிளஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனுடன், கேரளாவில் நகர்ப்புறங் களுக்கு அய்யங்காளி நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் 2011 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  3,18,463 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 41,11,753 பணி ஆணைகள் உருவாக்கப் பட்டன. மாநிலத்தில் 100 வேலை நாட்களை நிறைவு செய்யும் அனைத்து குடும்பங்களுக்கும் பண்டிகை கால உதவித்தொகையாக ரூ.1000 தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாநி லத்தில் இத்திட்டத்தில் பணிபுரியும் 90 சத விகிதம் பேர் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள். 100 சதவீதம் கால்நடை மேய்ப்ப வர்கள் பெண்கள். இந்த பெரும் பகுதி தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசு வேலை உறுதித் தொழிலாளர் நல நிதிச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.  அதன் நிர்வாகத்திற்காக நலநிதி வாரியமும் நடைமுறைக்கு வருகிறது.

2025-க்குள் வறுமை இல்லா கேரளம்: பினராயி விஜயன்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், 2025-ஆம் ஆண்டுக்குள் கேரளா ஏழைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று கூறினார். அதற்கான முயற்சிகள் நிறைவடைந்துள்ளன. 64,000 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அந்த இலக்கு நவம்பர் 2025க்குள் எட்டப்படும். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 600 வாக்குறுதிகளில் 580 வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். ஒன்றிய அரசு சில விசயங்களுக்கு பெயரளவுக்கான தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு கேரளத்துக்கு வழங்க வேண்டிய தொகையில் ரூ.300 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 3.9 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.