திருச்சூர், நவ.17- விடுதலைப் போராட்டத்துக்காக தோழர் இம்எஸ் சுற்றித் திரிந்த திருச்சூர் நகரத்தில் ஆடவும், பாடவும், மகிழ்ச்சியை கொண்டாடவும், அரட்டையடிக்கவும். இஎம்எஸ் சதுக்கம் நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. திறந்தவெளி அரங்கம் மற்றும் மினி பார்க் ஆகியவை கொண்ட கலாச்சார நக ரத்தை மாநகராட்சியின் எல்டிஎப் நிர்வாகக்குழு நிர்மாணித்து வருகிறது. திருச்சூர் பட்டாளம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவல கம் அருகே பூங்கா உள்ளது. அழகான மேடை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஸ்டேடியம் பாணி இருக்கைகள் அழகாக டைல்ஸ் போடப்பட்டுள்ளன. மேடையின் இடப்புறம் இ.எம். எஸ்ஸின் சிற்பம் உள்ளது. சுற்றிலும் விளக்குகள் உள்ளன. பூங்காவைச் சுற்றி பனை மரங்களும், மரங்களும் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. உள்ளே அழகான பூச்செடிகள், ஆம்பல் குளம், பச்சை புல்வெளி மற்றும் செல்ஃபி பாயின்ட் உள்ளன.
பொருட்கள் பாதுகாப்பு அறையும் உள்ளது. இ.எம்.எஸ் உட்கார்ந்து உரையாடும் வடிவில் உள்ள சிற்பம் சிற்பி பிரேம்ஜியால் உருவாக்கப்பட்டுள்ளது. மேடையில் நாணய வடிவில் இ.எம்.எஸ்ஸின் உருவப்படமும் உள்ளது. சுற்றுச் சுவரில், இ.எம்.எஸ்ஸின் வாழ்வின் முக்கியமான தருணங்கள் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சித்திர விளக்கங்களைக் கொண்டிருப்பதால் புதிய தலைமுறையினரின் ஆய்வுக்கு உதவியாக இருக்கும். ஸ்ரீ நாராயணகுரு, குமரனாசன் போன்றோரின் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் பொறிக்கப்பட்டுள்ளன. சமையலறையில் இருந்து மேடை வரை என்ற சிற்பத் தொகுப்பு உள்ளது. இ.எம்.எஸ்.இன் சிறைவாசம் என்கிற சிற்பத்தில் ஏ.கே.ஜி.யும் கிருஷ்ண பிள்ளையும் உள்ளனர். சுதந்திரப் போராட்டமும் காந்தியின் நினைவுகளும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. இந்த திறந்தவெளி அரங்கம் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என மேயர் எம்.கே.வர்கீஸ்தெரிவித்தார்.