திருவனந்தபுரம், நவ.23- மகளிர் நட்புறவு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் 10,000 மகளிர் தொழில் நிறுவனங்களை மாநில அரசு மூன்று ஆண்டு களுக்குள் தொடங்கும்.குறைந்தது 30,000 பேருக்கு வேலை கிடைக்கும். கேரளத்தில் ஒன்றரை லட்சம் பெண்களை உள்ளடக்கிய நட்புறவு சுற்றுலா வலையமைப்பு உருவாக்கப்படுகிறது.பயணம் செய்ய விரும்பும் பெண்களும் வலையமைப்பில் சேரலாம்.தங்குமிடம், உணவு, பயணம், வழிகாட்டி போன்ற சுற்றுலாத் தொகுப்பின் அனைத்து கூறுகளையும் பெண்கள் நிர்வகிப்பார்கள்.ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 30 பேர் மூன்று ஆண்டுகளுக்குள் வலையமைப்பில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்குபவர், ஓட்டுநர்கள், வீடுகளில் தங்கல் (ஹோம் ஸ்டே) மற்றும் உணவகத் துறைகளில் வணிகங்களைத் துவக்கலாம். கடந்த மாதம், சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ், பொறுப்பு சுற்றுலா இயக்கத்தின் பகுதியாக மகளிர் நட்பு சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்தார்.பொறுப்பு சுற்றுலா இயக்கமானது, சுற்றுலாத் துறை தொடர்பான தொழில்களை தொடங்கவும், வேலைப் பயிற்சி அளிக்கவும் பெண்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும்.தற்போது 900 பெண் உறுப்பினர்கள் ஆன்லைன் பயிற்சி பெற்று வருகின்றனர்.பல்வேறு துறைகளின் உதவியுடன் தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடன் வசதியும் செய்து தரப்படும்.
பெண்களுக்கு உகந்த மாநிலம்
உள்ளாட்சித் துறையின் ஒத்துழைப்புடன் மாநிலத்தை முழுமையான பெண்கள் நட்பு சுற்றுலா மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் தெரிவித்தார். கேரளாவின் எந்தப் பகுதியிலும் பெண்கள் தனியாகவோ அல்லது குழு வாகவோ பயணிக்கக் கூடிய வகையில் உலகிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமான திட்டம் இருக்கும் என்று அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் கூறினார்.சுற்றுலாத் துறையில் நுழைய விரும்புபவர்களும், அது தொடர்பான துறையில் பணி புரிபவர்களும் சுற்றுலா வலையமைப்பில் உறுப்பினர்களாக லாம். இலவச பயிற்சி பெற பதிவு செய்வதற்கான இணைப்பு: https://docs.google.com/forms/d/1ShrwwwiOvVQ0Tx-ht66Wfz5-r3B3yB3oxcnM6HsDpVA/edit