states

img

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கே.டி.பினுவிற்கு உற்சாக வரவேற்பு

ஏலப்பாறை, பிப்.5- இடுக்கி மாவட்ட பஞ்சா யத்து தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.டி.பினுவிற்கு தோட்டம் மற்றும் விவசாயப் பகுதி களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை ஏலப்பாறை பேருந்து நிலை யத்தில் நடந்த வரவேற்பு  நிகழ்ச்சியில் ஏரியா செய லாளர் எம்.ஜே.வாவச்சன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொச்சுக்கருந் தருவி, காட்டாடிக்கவல், வளகோடு, மாட்டுத்தா வளம், வாகமன், மருதும் மேடு, வெம்ப்லி, முப்பத்தி அஞ்சாம்மைல் ஆகிய இடங் களில் வரவேற்பு அளிக்கப் பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் கே.டி.பினுவை வரவேற்க வந்திருந்தனர். வரவேற்பு மையங்களில் லோக்கல் கமிட்டி செயலாளர்கள், ஏரி யாக்குழு உறுப்பினர்கள், வர்க்க-வெகுஜன அமைப் புகளின் தலைவர்கள் ஆகி யோர் பேசினர்.

;