states

img

வாட்டர் மெட்ரோவும் டிஜிட்டல் அறிவியல் பூங்காவும் கேரள மாநில அரசின் சாதனைகளே!

திருவனந்தபுரம், ஏப்.27- கேரளாவிற்கு ஒன்றிய அரசு  பெரிய திட்டங்களை அனுமதித்துள் ளது என்கிற பாஜகவின் கூற்றுக்கு முரணான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வாட்டர் மெட்ரோ மற்றும் டிஜிட்டல் சயின்ஸ் பார்க் போன்ற முக்கிய திட்டங்கள் கேரளாவிற்கு சொந்தமானது என்பது நிரூபணமாகி உள்ளது. வாட்டர் மெட்ரோவுக்கு ரூ.1136.83 கோடியும், டிஜிட்டல் அறிவியல் பூங்கா வுக்கு ரூ.1500 கோடியும் மாநில நிதியும் கடனுடன் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், பிரதமரின் உரை உட்பட இதில் பங்காளியாகும் முயற்சி நடக்கிறது. கேரளாவுக்கு ரூ.2,033 கோடி மதிப்பி லான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக பெருமை பேசும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் உண்மைகளை கூறுவதில்லை. வழக்க மான வருடாந்திர திட்டங்களின் ஒரு பகுதி யாக ரயில் நிலைய மேம்பாடு, பாதை இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் ஆகியவை மட்டுமே ‘பெரிய திட்டங்கள்’. நேமம்,

கொச்சுவேலி-ரூ.157 கோடி, பாலக்காடு- திண்டுக்கல் மின்மய மாக்கல்- ரூ.242 கோடி, திருவனந்த புரம்-ஷோர்னூர் பாதை மேம்படுத்தல்-ரூ.381 கோடி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, வர்க்கலா ரயில் நிலைய மேம்படுத்தல்-ரூ.1140 கோடி. கொல்லம் மற்றும் எர்ணாகுளம் தெற்கு-வடக்கு ரயில் நிலையங்களின் வளர்ச்சிக்கு ரூ.300 கோடியும், 25 நிலையங் களில் உள்கட்டமைப்புக்காக அதிக பட்சமாக ரூ.10 கோடியும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேமம் கொச்சுவேலி முனையங்கள் லாபகர மாக இல்லாததால் கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு கேரளாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த ஆண்டு ரயில்வே கர்நாடகாவுக்கு ரூ.7561 கோடியும் (கடந்த ஆண்டை விட ஒன்பது மடங்கு அதிகம்) குஜராத்திற்கு ரூ.8332 கோடியும் ஒதுக்கியுள்ளது. முன்ன தாக, கேரளாவில் ரயில்வே மேம்பாட்டிற்கு தனியாரின் பங்களிப்பு அவசியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் கூறியிருந்தார். வளர்ச்சி என்பது பொது-தனியார் கூட்டாண்மை மூல மாகவோ அல்லது முழுமையாக தனி யார்மயமாக்கப்பட்டதாகவோ இருக்க லாம் என்பதே ஒன்றிய அரசின் நிலைப்பாடு.