குஜராத்தின் மோர்பி பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒவேரா நிறுவனத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழப்பு; 56 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒவேரா நிறுவனத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.