அகமதாபாத், நவ.23- துருப்பிடித்து அரிக்கப்பட்ட கேபிள்கள், தளர்வான போல்ட் நட்டுகள் கொண்ட தொங்கு பாலத்தில்மித மிஞ்சிய அளவில் ஆட்களை ஏற்றியது போன்றவையே குஜராத் மோர்பி ஆற்றின் தொங்குபாலம் அறுந்துவிழ காரணம் என தடயவியல் பரிசோத னை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய தொங்கு பாலத்தில் ஏற ஒரே நாளில் 3165 டிக்கெட்டுகள் விற்கப் பட்டன. பயிற்சி பெறாத தினக்கூலி கள் காவலர்களாக இருந்தனர்.150 பேரைக் கொன்ற குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் பேரழிவின் தடயவியல் பரிசோதனை அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளன.மோர்பி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட பாலம் சீரமைப்புக்காக மூடப்பட்ட ஐந்தாவது நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளது.
பாலத்தின் இரு முனைகளிலும் இரண்டு டிக்கெட் விற்பனையாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு எத்தனை டிக்கெட்டுகள் விநியோகிக்கலாம் என்பதும் தெரிந்திருக்கவில்லை என்றும் தடயவியல் அறிக்கை கூறியுள்ளது. 100 டிக்கெட் கொடுத்த பிறகு நுழை வதை நிறுத்த வேண்டும் என்பது விதி.பாலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள சில நிறுவன அதிகாரிகள் இணங்கவில்லை. விபத்து ஏற்பட்டால், மீட்புப் பணி களுக்குத் தேவையான முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனவும், படகுகளும் காவ லர்களும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. அதேநேரத்தில் ஒரேவா நிறு வனத்திற்கு, பொறுப்பற்ற முறையில், ஒப்பந்தம் வழங்கிய நகராட்சிக்கு எதி ரான விசாரணையும் முன்னேற வில்லை. பா.ஜ.க.வுக்கும் நிறுவனத்து க்கும் இடையே உள்ள தொடர்புதான் இந்த முறைகேடுகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.