கணவராக இருந்தாலும் பாலியல் பலாத்காரம் என்பது பலாத்காரமே என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் திருமணமானது முதல் கணவர் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாக மனைவி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, ஆண் என்பவர் ஆண்தான். சட்டம் என்பதும் சட்டம்தான். பலாத்காரம் என்றால் அது பலாத்காரம் தான். ஒரு ஆண் பலாத்காரம் செய்து, அது கணவராக இருந்தாலும் அதில் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் மனைவியாக இருந்தாலும் அது பலாத்காரம் தான் என்று தீர்ப்பளித்தார். மேலும் கணவர் தரப்பில் போடப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.