states

img

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி வெற்றி கொண்டாத்தின்போது சின்னசுவாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட இன்னும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிஎன்எஸ் பிரிவு 105, பிரிவு 125(12) (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல்), பிரிவு 142 (சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்தல்), பிரிவு 121 (குற்றத்தைத் தூண்டுதல்) மற்றும் பிரிவு 190 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.