states

img

‘அழும் பிரதமர்’, ‘கமிஷன் முதல்வர்’

பெங்களூரு, மே 2- கர்நாடகத்தில் தேர்தல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரச்சார வேகத்தை சமாளிக்க முடியாமல் பாஜக  தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர்  மோடியே என்ன செய்வதென்று தெரியாமல் புலம்ப ஆரம்பித்து விட்டார். அண்மையில், பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய  பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் என்னை  91 முறை பலவிதமாக அவமதிப்பு செய்துள்ளனர்  என்று கண்ணீர் விடாத குறையாக அழுது கூப்பாடு  போட்டார். ஆனால், காங்கிரஸ் இதனையும் தனக்கு சாதகமாக மாற்றி பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத் தில் பேசிய பிரியங்கா காந்தி, “மக்கள் முன்பு  நின்றுகொண்டு, தான் துஷ்பிரயோகம் செய்யப்  பட்டதாகக் கூறி அழும் ஒரு பிரதமரை நான் முதல்  முறையாகப் பார்க்கிறேன்” என்று சாடினார்.  “கடந்த இரண்டு மூன்று நாட்களாக நான்  பார்ப்பது வினோதமாக இருக்கிறது. பல பிர தமர்களை நான் பார்த்திருக்கிறேன், இந்திரா ஜி  (இந்திரா காந்தி) இந்த நாட்டுக்காக தோட்டாக் களை பெற்றார், நான் ராஜீவ் காந்தியை பார்த்  தேன், நாட்டுக்காக தனது உயிரை தியாகம்  செய்தார். பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்  மோகன் சிங் ஆகியோர் இந்த நாட்டிற்காக கடுமை யாக உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்த, மக்கள் முன் அழும் முதல்  பிரதமர் மோடிதான்; மக்களின் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக, பிரதமர் தனது துயரங்க ளைக் கூறுகிறார்” என்றும் கிண்டலடித்தார்.

இதையொட்டி ஏனைய காங்கிரஸ் தலை வர்களும் பிரதமர் மோடியின் அழுகையைக் குறிப்பிட்டு விமர்சிக்கத் தொடங்கினர். முன்னதாக, 2022 செப்டம்பரில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கம், அரசு காண்ட்ராக்டிற்கு 40 சதவிகிதம் கமிஷன்  பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து,  பெங்களூரு முழுவதும் QR குறியீடுகள் மற்றும் “PayCM” (கமிஷன் முதல்வர்) தலைப்புகளுடன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதே பாணியைக் கையில் எடுத்த காங்கிர சார், “CryPM” (அழும் பிரதமர்) என்ற முழக்  கத்தை சுவரொட்டியாக வெளியிட்டு, “#CryPM PayCM (அழும் பிரதமர், கமிஷன் முதல்வர்) என்று சமூகவலைதளங்களில் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்கா காந்தி உரையின் வீடியோவை வெளியிட்டு, “#CryPMPayCM” என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ள காங்கிரஸ் மாநி லங்களவைத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா, #கர்நாடகா மக்கள் சொல்வதைக் கேட்கத்  தொடங்க வேண்டும்! இது ஒன்றே ராஜ தர்மம்”  எனவும் தெரிவித்துள்ளார். “கர்நாடக மக்கள் 40% கமிஷன் அரசை தோற்க டித்து, 100% அர்ப்பணிப்புள்ள அரசை காங்கிர சின் கீழ் தேர்ந்தெடுப்பார்கள்” என்று  காங்கி ரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவீட் செய்துள்ளார்.