states

img

மணிப்பூரை தொடர்ந்து பாஜக ஆளும் அரியானாவிலும் வன்முறை! - உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

மணிப்பூரை தொடர்ந்து பாஜக ஆளும் அரியானாவின் நூவில் வி.எச்.பி அமைப்பின் ஊர்வலத்தின் போது நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அரியானாவின் நூவில் வி.எச்.பி அமைப்பின் ஊர்வலத்தின் போது நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, குருகிராமின் பாத்ஷபூரில் இன்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கலவரத்தில் வாகனங்கள், உணவு விடுதி மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. வன்முறை நடந்த பகுதிகளில் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.