states

img

தில்லி மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளது பாஜக

தில்லி மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளது பாஜக

ஆம் ஆத்மி குற்றம்சாட்டு

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டு காலத்திற்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்கமான ரேகா குப்தா  பொறுப்பேற்றார். மற்ற மாநிலங்களில் மேற் கொண்டது போல தில்லியில் ஆட்சியை கைப் பற்றிய உடனே வாக்குறுதி, உத்தரவாதங்களை நிறைவேற்றாமல் முஸ்லிம் மன்னர்கள் பெயர்களில் உள்ள சாலைகளின் பெயரை மாற்றுவது, ஏழை மக்களின் குடிசைகளை கர்ப்பரேட்டுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ரேகா குப்தா ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்பின் கூட்டங் களிலேயே அதிகம் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பாஜக தில்லி மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளது எதிர்க் கட்சியான ஆம் ஆத்மி சரமாரியாக குற்றம்சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலை வர் ஆதிஷி மேலும் கூறுகையில்,”பாஜக தில்லி மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றி யுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தில்லியின் அடிப்படை அமைப்புகளை வெறும் 100 நாட்களுக்குள் பாஜக செயலி ழக்கச் செய்துள்ளது. பாஜக அனைத்து வகை யிலும் தோல்வியடைந்துள்ளது. பாஜக புறக்க ணித்த 15 முக்கிய பிரச்சனைகளை முன் வைத்துள்ளோம். இந்த அறிக்கையை வீடு வீடாக சென்று விநியோகிப்போம்” என அவர் கூறினார். 100 நாட்களில் 100 பொய் அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தில்லி செயலாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “பாஜகவின் நான்கு இயந்திர அரசு தினமும் பொய் பேசுகிறது. 100 நாட்களில் குறைந்தது 100 பொய்களை பாஜக அரசு கூறியுள்ளது. சமீ பத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா, மொஹல்லா கிளினிக் ஊழியர்களுள் யாரும் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று கூறி யிருந்தார். ஆனால் இன்று 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. தனியார் பள்ளிகளால் கட்ட ணம் உயர்த்தப்பட்டதைத் தடுக்க அரசு கூறிய பொய்கள் உயர்நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப் பட்டன” என அவர் கூறினார்.  ஆம் ஆத்மி குற்றம்சாட்டும்.. பாஜகவின் 15 தோல்விகளும்...  மின்சாரம் தடைபட்டு செயலிழந்தது, மின் சார கட்டணம் அதிகரித்தது, மார்ச் 8 வரை பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படவில்லை, தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி யுள்ளன, தில்லியில் தண்ணீர் பற்றாக்குறை - விநியோகத்தில் குறைபாடு, குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்தது, மாசு அளவு அதிகரித்து -  மே மாதத்திலேயே காற்றின் தரம் 500-ஐக் கடந்தது, மொஹல்லா கிளினிக்குகள் மூடப்பட்டன, தனியார் மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் லேப்களில் இலவச பரிசோதனை நிறுத்தப்பட்டது, பஸ் மார்ஷல்கள் மற்றும் மொஹல்லா கிளினிக் ஊழியர்கள் வேலையிழந்தனர், 25,000 விதவை களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது, அரசு அலுவ லகங்களில் அம்பேத்கர் - பகத்சிங் போன்ற வர்களின் படங்கள் அகற்றப்பட்டன, குடிசை வாழ் மக்கள் விரட்டப்பட்டனர்.  ஹோலிக்கு இலவச சிலிண்டர் வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தில்லி பாஜக அரசின் 15 தோல்விகளை ஆம் ஆத்மி பட்டியலிட்டுள்ளது.