சண்டிகர் கடந்த மக்களவை தேர்த லின் போதும், அதற்கு முன் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலின் போதும் பாஜக ஆதரவு ஊடகங்களான “கோடி மீடியா” முஸ்லிம், தலித் மக்களுக்கு எதிராகவும், மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவி னரின் வெறுப்புப் பேச்சுக்கள் நாட்டின் நலன் மிகுந்த செய்தி போன்றும், பொய்ச் செய்திகளை கூட உண்மையான செய்திக ளை போன்று பின்னிப் பிணைத்து பிரச்சாரப் பொருளாக பயன் படுத்தின. அப்போது ஜனநாய கத்தின் மீது நம்பிக்கை கொண்ட முகமது ஜுபைர், துருவ் ரதி போன்ற சமூகவலைத்தள சரி பார்ப்பாளர்கள் “கோடி மீடியா” ஊடகங்களின் பொய்ப் பிரச்சா ரத்தை அம்பலப்படுத்தினர். இத னால் “கோடி மீடியா” ஊடகங்கள் உண்மைத் தன்மையை இழந்து பலத்த சேதாரத்தை சந்தித்தன.
இந்நிலையில், ஹரியானா சட்டமன்ற தேர்தலிலும் “கோடி மீடியா” ஊடகங்கள் பொய்ச் செய்திகளை பரப்பி பலத்த அடி வாங்கியுள்ளது. ஹரியா னாவில் ஒரே கட்டமாக அக்., 5 அன்று சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், சீட் பிரச்சனையால் பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் காங்கி ரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் இணைந்தும், சுயேச்சையாகவும் போட்டியிட்டு வருகின்றனர். இதனை மறைக்க “கோடி மீடியா” ஊடகங்கள் ஹரியானா காங்கிரஸ் பிரிவின் செயற்குழு உறுப்பினரும், மாநிலத்தின் முக் கிய தலித் தலைவருமான குமாரி செல்ஜா பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியிட்டது.
தலித் தலைவர் என்பதா லேயே காங்கிரஸ் செல்ஜாவை ஓரம் கட்டியது என சாதி ரீதியிலாக செய்திகள் வெளியிடப்பட்டன.
எல்லாம் புரளி
“நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போகிறேன் என பாஜகவினர் மற்றும் ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றனர்” என செல்ஜா குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,“காங்கிரஸ் கட்சி யில் எந்த ஒரு அதிருப்தியும் இல்லை. கட்சிக்குள் ஒரு சில முடிவுகள் தொடர்பாக சில விவா தங்கள் இருக்கும். அதனை கட்சிக் குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். எனக்கு எந்த பிரச்சனை இருந்தா லும் பாஜகவினர் தமக்கு அறி வுரை கூற தேவைஇல்லை” என பதிலடி கொடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் செல்ஜா.
மக்களவைத் தேர்தலில் புர ளியை கிளப்பி அடி வாங்கியது போல, ஹரியானா சட்டமன்ற தேர்த லிலும் போலிச் செய்திகளை வெளியிட்டு “கோடி மீடியா” ஊடகங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது.