லக்னோ, பிப். 2 - ராமர் கோயிலின் கரு வறையில் வைக்கப்பட இருக்கும், ராமர், சீதை சிலைகளை வடிப்பதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்திலிருந்து, அயோத்தியை வந்தடைந்து ள்ளதாக விஎச்பி தெரி வித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ராமர் கோயில் கட்டும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இப்பணிகள் ஜனவரி 2-ஆம் வாரத்துடன், 60 சத விகிதம் நிறைவு பெற்றுள்ள தாகவும், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கருவறையில் ராமர் சிலைகள் நிறுவப்படும்; அதனை தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும் என்று ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட விருக்கும் ராமர், சீதை சிலை களை வடிப்பதற்காக, நேபாள நாட்டிலிருந்து 26 டன் மற்றும் 14 டன் எடை கொண்ட 2 பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. விஎச்பி-யின் தேசியச் செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ் தலைமையில், நேபா ளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் இருந்து வியாழனன்று அயோ த்தியை வந்தடைந்தன. இங்கு அர்ச்சகர்கள் மூலம் மாலைகளால் அலங்கரித்து சடங்குகள் செய்யப்பட்ட அந்த கற்பாறைகள், தற்போது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை யிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. முன்னதாக, நேபாளத்தின் காளி கண்டகி நீர்வீழ்ச்சியில் இருந்து வெட்டியெடுக்கப் பட்டுள்ள இந்த ஷாலிகிராம் பாறை கள் அரிதானவை என்றும், 6 கோடி ஆண்டுகள் பழமை யானவை என்றும், இந்தக் கல்லில் இருந்து செதுக்கப் பட உள்ள குழந்தை வடி விலான ராமர் சிலைதான் அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட உள்ளது என்றும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.