மக்களவைத் தேர்த லுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், பாஜகவை ஆட்சி அதி காரத்திலிருந்து வெளி யேற்ற 28 கட்சிகள் ஒன்றி ணைந்து “இந்தியா” என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் தொகுதி பங்கீட்டில் தீவி ரமாக ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவின் வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலை யில், அதே நிலைப்பாட்டு டன் உள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் “இந்தியா” கூட்டணியில் இணையாமல் தனியாக பாஜகவை தனி களத்தில் நின்று விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், “மாயா வதி உண்மையிலேயே பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் அவரது பகுஜன் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்டணியில் இணைய வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப் பினருமான பிரமோத் திவாரி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,”சமாஜ்வாதி கட்சியுடன் இருமுறை சந்தித்து பேசியுள்ள நிலை யில், தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை.
ஆனால் பாஜகவை மாயாவதி உண்மையாகவே எதிர்ப்ப தாக இருந்தால், பகுஜன் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்டணியில் இணைய வேண்டும்” எனக் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த பிரமோத் திவாரி ஏற்கெனவே மாயாவதியை “இந்தியா” கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.
ஆனால் மாயாவதி இதுதொடர்பாக எவ்வித பதிலும் அளிக்காத நிலை யில், தற்போது மீண்டும் “இந்தியா” கூட்டணியில் இணையுமாறு மாயா வதிக்கு அழைப்பு விடுவது போல பிரமோத் திவாரி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.