மேகாலயாவில் சோஹியோங் தொகுதிக்கான தேர்தல் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் சோஹியோங் தொகுதியில் போடியிடும் வேட்பாளர் லிங்டோ பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்து உயிரிழந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது.
60 தொகுதிகளைக்கொண்ட மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் சோஹியோங் தொகுதிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மற்ற 59 தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போல் பிப்ரவரி 27 இல் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.