states

img

தண்ணீரை சேமிக்க மது அருந்துங்கள் - பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

தண்ணீரை சேமிக்க மது அருந்துங்கள் என்று பாஜக எம்.பி ஜனார்தன் மிஸ்ரா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று, ரேவா தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜனார்தன் மிஸ்ரா, அப்பகுதியில் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மக்கள் மது அருந்தலாம், புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை பயன்படுத்தலாம், ஆனால் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான வருகின்றது. மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது அவர் வழக்கமாக செய்யும் செயல்தான் என பலர் விமர்சத்துள்ளனர். அதேபோல் சமீபத்தில், அவர் தனது கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.