states

img

ம.பி: நகைக்கடை கொள்ளை வழக்கில் அக்னிவீரர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அக்னிவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இந்திய ராணுவத்தில் அக்னிவீராக பணியாற்றி வரும் மோகித் சிங் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் விசாரணையில், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது மோகித் சிங் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.