states

போலிச் சாமியார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி

போபால், ஆக. 4 - பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவ ட்டம் ஷாபூர் கிராமத்தில் ஞாயிறன்று ஹர்தல் பாபா என்ற போலிச்சாமியார் பங்கேற்ற இந்து மத நிகழ்ச்சி அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 

இந்த கோர விபத்தில் 9 குழந்தைகள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்து மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10 முதல் 15 வய துக்கு உட்பட்டவர்கள் என சாகர் மாவட்ட காவல் ஆணையர் வீரேந்திரா சிங்  ராவத் தகவல் தெரிவித்துள் ளார். 

இந்நிலையில், உயிரி ழந்த 9 குழந்தைகளின் குடும்ப த்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்தியப்பிரதேச அரசு அறி வித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் பாஜக ஆளும் மற் றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் போலே  பாபா என்ற போலிச்சாமி யார் பங்கேற்ற இந்து மத வழி பாட்டு  நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.