states

img

வன்முறையாளர்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள் மீண்டும் பற்றியெரியும் மணிப்பூர்; ஒரே நாளில் 10 பேர் பலி!

ஜிரிபாம், செப். 7 - மணிப்பூர் மாநிலம் மீண்டும் பற்றி யெரியத் துவங்கியுள்ளது. சனிக்கிழ மையன்று மட்டும் நடைபெற்ற வன் முறைச் சம்பவங்களில் 10 பேர் கொல்  லப்பட்டுள்ளனர்.

17 மாதமாக நீடிக்கும் வன்முறை

தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக தூண்டிவிட்ட இடஒதுக்கீடு விவகாரம், மணிப்பூர் மாநிலத்தை கடந்த 17 மாதங்களாக அமைதி இழக்கச் செய்  துள்ளது. அங்குள்ள குக்கி பழங்குடி கள் மற்றும் மெய்டெய் குழுக்களுக்கு இடையிலான வன்முறையில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டும், இப் போது வரை மோதல் ஓயவில்லை. மாநிலத்தை ஆளும் பாஜக அரசானது வன்முறையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மேற்கு இம்பாலில் அண்மையில் வன்முறைக் கும்பல் ஒன்று டிரோன் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி யது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரி ழந்தனர். மேலும் 12 பேர்காயமடைந்தனர்.

டிரோன்கள் மூலம் தாக்குதல்

டிரோன் மூலம் நடத்தப்பட்ட இத்  தாக்குதலைக் கண்டித்து, மேற்கு  இம்பால் மாவட்டத்தில் ஆயிரக்க ணக்கானோர் வெள்ளிக்கிழமை மனி தச் சங்கிலி போராட்டம் நடத்தினர். பள்ளி-கல்லூரி மாணவர்கள், பெண்  கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆனால், அன்றைய தினமே, மணிப்பூ ரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஒரு வரின் வீட்டில் ராக்கெட் குண்டுவீசி தாக்  குதல் நடத்தப்பட்டது. இதில் முதிய வர் ஒருவர் உயிரிழந்தார். 13 வயது சிறுமி  உள்பட மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

ஆயுதம் தாங்கிய குழு ஒன்று, கடந்த  5 நாட்களாக சில கிராமங்கள் மீது ராக்  கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் நிலையில், சனிக்கிழமையன்று மணிப்பூரின் ஜிரி பாம் மாவட்டத்தில் புதிதாக 5 பேர் வரை  கொல்லப்பட்டுள்ளனர்.

“மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலைக்கு  பின்னர், மாவட்டத் தலைநகரில் இருந்து  7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயு தம் தாங்கிய குழுக்களுக்கு இடையில்  பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்  டக்காரர்கள் உட்பட நான்கு போராட் டக்காரர்கள் உயிரிழந்தனர்” என்று காவல்  துறை தெரிவித்துள்ளனர்.

அதிநவீன ஆயுதங்கள்

வன்முறை கும்பலில் ஒரு பகுதியினர் தற்போது அதி நவீன ஆயு தங்கள், துப்பாக்கிகள் மற்றும் கை யெறிக் குண்டுகளைப் பயன்படுத்து வதுடன், கிராமங்கள் மீது டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்கள், “போராட்  டக்காரர்கள் நீண்ட தூரம் தாக்கும் வகை யிலான ராக்கெட்டை பயன்படுத்தி யுள்ளனர். வெள்ளிக்கிழமை ஏவப் பட்ட ராக்கெட் குறைந்தது நான்கு அடி கள் உள்ளன. துருப் பிடிக்காத வகை யில் துத்தநாகம் பூசப்பட்ட (galvanised)  இரும்புக்குழாயில் வெடிமருந்துகளை நிரப்பி, அதனை உள்ளூரில் தயா ரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரில் வைத்து சுட்டுள்ளனர். ராக்கெட் அதிக  தூரம் செல்வதற்கு வெடிமருந்துகளின்  அளவை அறிந்திருப்பது முக்கியம். அமைதியாக இருந்த மாதங்களில் அவர்கள் அதற்கு பயிற்சி பெற்றுள்  ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

பதற்றம் அதிகரிப்பு

மணிப்பூரில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வன்முறையாளர்கள் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து ஒரு வரைக் கொன்ற பிறகு காலையில்  துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இறந்தவர்கள் குக்கி மற்றும் மெய்டெய்  ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த வர்கள் என்று எங்களிடம் தகவல்கள் உள்ளன; பலி எண்ணிக்கை அதிகரிக்க லாம்” என்று தெரிவித்தார். சனிக்கிழமை இரவுக்குள் பலி எண்ணிக்கை 10 ஆக  உயர்ந்தது.

இந்த வன்முறை மூலம் மணிப்பூர்  மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்  டுள்ளது. விஷ்ணுபூர், கிழக்கு இம்பால்  மாவட்ட மக்கள் மீண்டும் அமைதியை இழந்து, அச்சத்தில் உறைந்துள்ளனர்.