states

img

ஆளுநர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது!

பெங்களூரு, ஆக. 4 - இந்தியாவில் உள்ள ஆளுநர்களில் சிலர், செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருப்பதுடன், தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து, வேலை செய்வது போல நடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா குறிப்பிட்டுள்ளார்.

பெங்களுரூவில் உள்ள தேசிய  சட்டப்பல்கலைக்கழகத்தில் பன்மைத் துவ ஒப்பந்தம் மற்றும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மாநாட்டில் நீதிபதி பி.வி. நாகரத்னா பேசினார். 

அப்போது, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில்லை என்ற பிரச்சனை உள்ளது; இதுதொடர் பாக ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பது ஒரு ‘சோகமான கதை’ என்று நீதிபதி பி.வி. நாகரத்னா குறிப்பிட்டார்.

மேலும், ‘ஆளுநர்களின் நடுநிலை’ குறித்துப் பேசிய நாகரத்னா, “ஆளு நர்கள் அவர்களுக்குரிய சில கடமை களை நிறைவேற்றுவார்கள் என மாநி லங்கள் எதிர்பார்க்கின்றன. ஆளுநர் கள் நல்லிணக்கத்தின் ஒரு அங்கமாக இருப்பார்கள் என்று நமது அரசிய லமைப்பு நம்பிக்கை வைத்துள்ளது. அதற்கேற்ப உண்மையாகவே ஆளு நர்கள் தங்களது கடமைகளை உணர் ந்து செயல்பட்டால், முரண்பட்டவர் களிடையே (மக்களிடையே) ஒருவித புரிதலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம். ஆளுநர் பதவியும் இந்த நோக்கத்திற்காகவே அரசி யலமைப்பால் முன்மொழியப்பட்டது. 

ஆளுநர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். கட்சி  விவகாரங்களுக்குள் அவர்களை உட் படுத்தக் கூடாது. இந்திய அரசிய லமைப்பை ஆழப்படுத்தவும், கூர்மைப் படுத்தவும், ‘கூட்டாட்சி, சகோதரத்து வம், அடிப்படை உரிமைகள் மற்றும் கொள்கை ரீதியாக நாம்’ அணுக வேண்டும்.

ஆனால், ஒன்றிய அரசுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களுக்கு இடையே மோதல்கள் அதி கரித்து வருகின்றன. மாநிலங்களை தகுதி குறைந்தவர்கள் அல்லது மாநி லங்கள் தங்களுக்கு கீழ்ப்படிந்த வர்கள் என்று கருதக்கூடாது. அரசி யலமைப்பின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும்.

அரசியலமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நான்கு லட்சியங் களில் ஒன்றான சகோதரத்துவம் மிகக் குறைவாகவே கடைப்பிடிக்கப்படு கிறது.  சகோதரத்துவத்தின் லட்சி யத்தை அடைவதற்கான வேட்கையை ஒவ்வொரு குடிமகனும் தனது அடிப் படைக் கடமைகளில் ஒன்றாகக் கருத வேண்டும். இவ்வாறு நீதிபதி பி.வி. நாகரத்னா குறிப்பிட்டுள்ளார்.