states

img

பஞ்சாப் தொழிற்சாலையில் வாயுக்கசிவு - 11 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட், குளிரூட்டும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7.15 மணிக்கு திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதில், தொழிற்சாலை அருகே குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மயங்கி விழுந்தவர்களை மீட்டு உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை அருகே 300 மீட்டர் சுற்றளவுக்கு வாயுக்கசிவு இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்களை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.