ஜலந்தர் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் பஞ் சாப் மாநில மாநாடு ஜலந்தரில் தேஷ் பகத் யாத்கர் மண்டபத்தில் நடைபெற்றது. மூத்த தோழர் சித்தல் சிங் சன்ஹா செங் கொடியினை ஏற்றினார். தியாகி கள் ஸ்தூபிக்கு அரசியல் தலைமை க்குழு உறுப்பினர்கள் நிலோத்பால் பாசு, அசோக் தாவ்லே, மாநில செயலாளர் சுக்விந்தர் சிங் சேகன் மற்றும் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியபின் மாநாடு தொடங்கியது.
மாநாட்டில் 239 பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் பங் கேற்றார்கள். மாநாடு மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. அசோக் தாவ்லே மாநாட்டில் துவக்கவுரையாற்றி னார்.
மாநில செயலாளர் சுக்விந்தர் சிங் சேகன் அரசியல் - ஸ்தாபன அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது 34 பிரதிநிதிகள் விவா தங்களை மேற்கொண்டனர்.
மாநாட்டில் 36 பேர் கொண்டமாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. பு சுக்விந்தர் சிங் சேகன் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்க!
மாநாட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், வேளாண் விளைபொருள்களுக்குக் குறை ந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கோரியும், போதைப் பொருள்கள் புழக்கத்திற்கு எதி ராகவும், வேலைவாய்ப்பு அளிக் கும் வகையில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும் என்று வலியுறுத்தி யும், மாணவர் பேரவைத் தேர்தல் கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், மணல் மற்றும் கனிம வளங்கள் கொள்ளைய டிக்கப்படுவதைத் தடுத்திடக் கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக் கக்கோரியும், சண்டிகாரை பஞ்சாப் மாநிலத்திடம் ஒப்படைக் கக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு நிறைவுரையாற்றினார்.
(ந.நி.)