states

img

தெலுங்கானா முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்

தெலுங்கானா மாநிலத்தின் கோயகுடம், சத்துப்பள்ளி நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதை ஒன்றிய அரசு கைவிடக் கோரியும், இரண்டு சுரங்கங்களையும் அரசுக்குச் சொந்தமான சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.