2010இல் பேசியதற்கு தற்பொழுது நடவடிக்கையாம்!
1997இல் “ஏ காட் ஆப் ஸ்மால் திங்ஸ்” என்ற நாவலுக் காக “புக்கர் பரிசு” என்ற உயரிய விருதைப் பெற்றதன் மூலம் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் என்ற பெயரை பெற்றார் நாட்டின் முக்கிய எழுத்தாளரான அருந்ததி ராய் (62). அதன் பிறகு அருந்ததி ராய் மனித உரிமை மீறல்கள், இயற்கை வளங்கள் சுரண்டப்படு தல், இந்துத்துவா அரசியல் போன்றவற்றுக்கு எதிராக தொ டர்ந்து பேசியும் எழுதியும் வருகி றார். இந்திய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை விமர் சித்து இந்தியாவிலும் வெளிநாடு களிலும் உரைகள் ஆற்றி வருகிறார். 1998இல் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய போது, அதை விமர்சித்து “கற்ப னையின் முடிவு” என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை சர்வதேச அளவில் கவனம் பெற் றது. மேலும் கடந்த பத்தாண்டுக ளில் மோடி அரசின் பல்வேறு கொள்கைகளையும், செயல்பாடு களையும் ஆதாரத்துடன் கடுமை யாக அருந்ததி ராய் விமர்சித்து வந்தார். இவரது விமர்சனம் நாட்டின் முக்கிய செய்தியாக வலம் வந்த நிலையில், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு அருந்ததி ராய் மீது பழிவாங்கல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2010இல் அக்டோபர் 25 அன்று “ஜம்மு - காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு” சார்பில் ஒரு கருத்த ரங்கம் நடைபெற்றது. முன்னாள் பேராசிரியர் ஹுசைன், சையத் அலி ஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் அருந்ததி ராய், ”காஷ்மீர் ஒருபோதும் இந்தியா வின் பகுதியாக இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டது” என்று பேசினார். மேலும் அரசியல் கைதி களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “ஆசாதி (சுதந்திரம்) – ஒரே வழி” என்ற தலைப்பில் தில்லியில் 2010 நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்த ரங்கத்திலும், காஷ்மீர் பற்றிய தனது கருத்தை அவர் கூறினார். “அருந்ததி ராய் உள்ளிட்டோர் வன்முறையை தூண்டும் வகை யில் பேசினர்” என்று சுஷில் பண்டிட் என்ற இந்துத்துவா அமைப்பு செயற்பாட்டாளர் காவல்துறையி டம் புகார் அளித்தார். அருந்ததி ராய் கைது செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்களும், தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஏடுகளும் பர பரப்பாக செய்தி வெளியிட்டன.ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இந்த விவகாரம் குறித்து செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”அருந்ததி ராய் மீது தில்லி போலீஸ் வழக்கு எதுவும் பதிவுசெய்ய வில்லை” என்று பதிலளித்தார். எனினும் சுஷில் பண்டிட் தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் அருந்ததி ராய் உள்ளிட் டோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந் தார்.
அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் அருந்ததி ராய், காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷேக் சௌகத் ஹுசேன் ஆகியோர் மீது தேசத்துரோகம் (உபா) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எனினும் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அருந்ததி ராய் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க தில்லி துணை நிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா வெள்ளியன்று அனுமதி அளித்துள் ளார். இதையடுத்து இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 124-ஏ (தேசத் துரோகம்), 153-ஏ (பல்வேறு மதத்தி னரிடையே பகைமையை வளர்த் தல்), 153-பி (தேசிய ஒருமைப்பாட் டிற்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பழி சுமத்துதல்), 504 (சமூக அமைதியைக் குலைத்தல்), 505 (மக்களிடையே பொய் வதந்தி களைப் பரப்புதல்) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் 13 (சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருத் தல்) ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கப் பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளு டன் தொடர்பில் இருப்பவர்கள் மீதுதான் “உபா” போன்ற கொடுங் கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவார்கள். ஆனால், தனிநபர்களையும் பயங்கரவாதிக ளாகக் கருதி, இத்தகைய சட்டங்க ளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லாம் என்ற நிலையை 2018இல் மோடி அரசு கொண்டுவந்தது. தற்போது மோடி மூன்றாவது முறை யாக பதவியேற்று இரண்டு வாரங்கள் கூட ஆகாத சூழலில் அருந்ததி ராய் மீது “உபா” வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள், அரசி யல் மற்றும் சமூக செயற்பாட்டா ளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு தொடர தில்லி துணை ஆளுநர் அனுமதி அளித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”தில்லி துணை நிலை ஆளுநர் 2010இல் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கூறப்படும் ஒரு பேச்சுக்காக அருந்ததி ராயை கொடூரமான “உபா” சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளித்துள்ளார். அனுமதி அளித்த தருணம் சந்தேகமாக உள்ளது. நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் விடுமுறையில் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது; வெட்கக் கேடானது. பாசிச நடவடிக்கை என்பதை தவிர வேறு எந்த விளக்கமும் அளிக்க இயலாது” என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் தில்லி மாநிலக்குழு கண்டனம்
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதா வது, “எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக பதினான்கு ஆண்டுக ளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் வழக்கில் வழக்கு தொடர தில்லி மாநில துணை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்தி ருப்பது துரோகத்தால் தூண்டப்பட்ட ஒரு செயலாகும். அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ (தேசத் துரோகம்), 153-ஏ (பல்வேறு மதத்தினரிடையே பகைமையை வளர்த்தல்), 153-பி (தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பழி சுமத்துதல்), 504 (சமூக அமைதியைக் குலைத்தல்), 505 (மக்களி டையே பொய் வதந்திகளைப் பரப்புதல்) மற்றும் சட்டவிரோத நடவ டிக்கைகள் தடைச் சட்டத்தின் 13 (சட்டவிரோதமான செயலுக்கு உடந் தையாக இருத்தல்) ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர அனுமதி அளித்திருப்பது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரின் வாயை அடக்குவதற்காக பாஜக அரசாங் கம் விரும்புகிறது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு அருந்ததிராய் மீது வழக்கு தொடர அனுமதித்திருப்பதை உடனடி யாக விலக்கிக்கொள்ள வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கோருகிறது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)
சப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளை கண்டனம்
சப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”14 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின்கீழ் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் கல்வியாளர் ஷேக் சௌகத் உசேன் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கை நடத்திட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு, சப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளை (சஹ்மத்) கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளி வந்தபின்னர் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதிலிருந்து இந்த அரசாங்கம் பேச்சுரிமைக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பிட வேண்டும் என்று சஹ்மத் அறைகூவி அழைக்கி றது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)
சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
எழுத்தாளர் அருந்ததி ராய் கைதுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், சிபிஎம் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைக ளுக்கு அடக்கு முறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.தேசம் அருந்ததி ராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” எனக் கூறி யுள்ளார்.