states

‘யாரையும் எதிர்ப்பதற்காக தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை’

புதுதில்லி, அக்.2-  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு  அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்  கல் செய்த மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டால் ஜக்ஜீவன் ராமுக்குப் பிறகு சுமார் ஐம்பது ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்  கும் முதல் தலித் தலைவர் ஆவார். இந்த நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே, ஞாயி றன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி னார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; கட்சி யை வலுப்படுத்தவே போட்டியிடுகிறேன். நான் வேட்புமனு தாக்கல் செய்த அன்றே, உதய்பூர் காங்கி ரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ‘ஒரு தலைவர், ஒரு  பதவி’ முடிவுக்கு இணங்கி எனது பதவியை ராஜி னாமா செய்தேன். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான எனது  பிரச்சாரத்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கு கிறேன்’ என்று கூறினார்.