states

img

போலிச் செய்திகள் மூலம் பாஜக வகுப்புவாத பிரச்சாரம்

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  தொடர்ந்து புதன்கிழமை (நவம்பர் 20) மீதமுள்ள 38 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இரண்டாம் கட்ட தேர்தலுக் கான பிரச்சாரம் திங்கள்கிழமை ஓய்ந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல்  பாஜக சமூக ஊடகங்களில் போலி  வீடியோ ஒன்றை பரப்பி வகுப்பு வாத பிரச்சாரம் மேற்கொண்டு வரு கிறது. அந்த வீடியோவில், ஜார்க் கண்ட் ஆளும் கட்சியான ஜேஎம்எம் கட்சிக்கு வாக்களித்த இந்து குடும்பத் தினர் மீது தாக்குதல் நடத்தியது போன்றும், இந்து குடும்பம் ஒன்றின் வீட்டை சிறுபான்மையினர் வலுக் கட்டாயமாக கையகப்படுத்துவது போலவும் காட்சிகள் உள்ளன. மேலும் வீடியோவின் இறுதியில் ஜேஎம்எம் கட்சிக்கு வாக்களித்தால் இந்துக்கள் வீடுகளை இழக்க நேரிடும் என பிரச்சாரக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.  மதவன்முறையை தூண்டும் இந்த வீடியோ தொடர்பாக ஜேஎம்எம் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்  அளித்தது. ஆனால் தேர்தல் ஆணை யம் மிக தாமதமாக தேர்தல் பிரச்சா ரம் நிறைவுபெற்ற பின் திங்கள்கிழ மை பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. மேலும் வீடியோவை திரும்ப பெற சமூக வலைதளங்களுக்கு அறி வுறுத்துமாறு ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  பாஜகவிற்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சா ரம் நிறைவுபெறும் வரை காத்தி ருந்து நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.