states

img

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு ஆபத்தில் உள்ளது

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேச்சு!

புதுதில்லி, மார்ச் 3 - நாடாளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம் என இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு ஆபத்தில் உள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் (Judge Business School -JBS) “21-ஆம் நூற்றாண்டைக் கவனிக்க கற்றுக் கொள்வது..” என்ற தலைப்பில், எம்பிஏ மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: ‘‘அடக்குமுறை சூழலுக்கு எதி ராக ஜனநாயக சூழலை உரு வாக்க நமக்கு புதிய சிந்தனைகள் தேவை. அதைப்பற்றி மாணவர் களாகிய நீங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். ‘கவனிக்கும் கலை’  மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் தான், யாத்திரை எனும் புனித பய ணத்தை மேற்கொள்பவர்கள் மற்ற வர்கள் சொல்வதைக் கேட்பதற்காக தங்களை அமைதிப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய ஜனநாயகம் தற்போது பெரும் அழுத்தத்திற்கும், தாக்கு தலுக்கும் உள்ளாகி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். இந்திய அரசியலமைப்பு, இந்தி யாவை மாநிலங்களின் கூட்டமைப்பு  என்று சொல்கிறது. அந்த கூட்ட மைப்புக்கு இடையே பேச்சு வார்த்தையும் உரையாடல்களும் தேவையாக இருக்கின்றன. ஆனால், அது தற்போது தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி யிருக்கிறது.

ஒரு ஜனநாயக நிறுவன கட்ட மைப்பிற்கு தேவையான அடிப்படை கள் நாடாளுமன்றம், சுதந்திர மான ஊடகங்கள், நீதித்துறை ஆகியவைதான். இவை முறை யாக செயல்பட வேண்டும். ஆனால், இவற்றின் செயல்பாடுகள் அனை த்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகளின் மீதான தாக்கு தல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறோம். இந்தியாவில் அதிக எண்ணி க்கையிலான அரசியல் தலை வர்களின் செல்போன்கள் ‘பெகாசஸ்’ எனும் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. என்னு டைய செல்போனும் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. இதனை என்னிடம் தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள், செல்போனில் பேசும்போது கவனமாக இருங்கள் என்று தெரிவித்தனர். இதுதான் நாங்கள் (இந்திய எதிர்க்கட்சிகள்) தொடர்ந்து அனுபவித்து வரும் அழுத்தம்.  எந்த வகையிலும் குற்றவியல் வழக்குகள் ஆகாத விஷயங்களிலும் கூட, என்மீது சில குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்கட்சித் தலைவர்கள் நின்றுகொண்டு சில  பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதற்காக  நாங்கள் சிறையில் அடைக்கப் பட்டோம். இதுபோல மூன்று நான்கு  தடவை நடந்திருக்கின்றது. ஒப்பீட்ட ளவில் இதுவும் ஒரு வன்முறையே. எதிர்க்கட்சி என்ற வகையில், ஊடகங்கள் மீதும், ஜனநாயக கட்ட மைப்பின் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம். அதேபோல, ஊட கங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப் படுவது குறித்தும் நீங்கள் கேள்வி ப்பட்டிருப்பீர்கள். என்னுடைய பார்வையில், நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டி ருக்கிறார்.  இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்  ளார்.