states

தமிழக, கேரள முதல்வர்களுக்கு தி.க. பாராட்டு

சென்னை, மார்ச் 30- திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி விடுத்துள்ள அறிக்கைவருமாறு: ‘சாதி - தீண்டாமை - பாராமை - நெருங்காமை’ ஆகிய மனித உரிமை பறித்த சமூகக் கொடுமைகளின் உச்ச மான காட்டுமிராண்டித்தனத்தை, சனா தனத்தினை அந்நாளைய திருவிதாங் கூர் ராஜ்ய அரசு வரிந்து  காப்பாற்றி வந்தது.  ஒடுக்கப்பட்டு உரிமை பறிக்கப் பட்ட கீழ்சாதியார் என்று அழைக்கப் பட்ட ‘‘ஈழவர், புலையர், தீயர், பறை யர்’’ என்பவர்களுக்கு வைக்கம் கோவி லைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமைக்காக 1924, மார்ச் 30 ஆம் தேதி  வெடித்துக் கிளம்பியதுதான் “வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்” ஆகும்! அந்நாளில் அங்கே அரசால் காப்பாற்றப்பட்ட சனாதன வருணா சிரமத்தை எதிர்த்து அம்மக்கள் பிரதி நிதிகளும், மற்ற மனிதாபிமானிகளும் தொடங்கிய சத்தியா கிரகத்தை முடக்கிவிட்டது அந்த மன்னர் அரசு! அந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை  பெரியாரை அழைத்து, போராட்ட த்தைத் தொடர அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், தந்தை பெரியார் அவர்கள், 1924 ஆம் ஆண்டு அங்கே சென்று போராட்டத்தை நடத்தி, இரு முறை கைதாகி, வைக்கம் போராட்ட த்தை ஒரு முக்கிய வரலாற்றுப் போராட்டமாக்கி, தெருக்களில் நடக்கும் உரிமையைப் பெறுவதில் வெற்றிக் கனி பறித்தார்.

நூற்றாண்டு இன்றிலிருந்து...

அதன் நூற்றாண்டு இன்றிலிருந்து மார்ச் 30 முதல் தொடங்கியதால்,தமிழக முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும்  அறிவித்துள்ள அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும் வரவேற்கத்தக்கவை என்று கூறியுள்ளார். மனித உரிமையின் மாண்புக்கு முன்னோட்டமான வைக்கம் போராட்டம் ஒரு துளி ரத்தம்  சிந்தாத ஆயுதம் ஏந்தாத ஓர் அமைதிப் புரட்சிவழிப் போராட்டம்! மனித உரிமைக்கான தாய்ப் போராட்டம்! பல மனித உரிமைப் போராட்டங் களுக்கும், சாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் ‘தாய்ப் போராட்டம்’ என்றே பொருத்தமாக  இத னை அழைக்கலாம்! அதன் முக்கி யத்தை இப்போதுள்ள இளைஞர், மாணவர், மக்கள் அறியவேண்டிய, இனி வரக்கூடிய தலைவர்களுக்கும் புரியவேண்டிய தேவையும் கருதி, நமது  முதலமைச்சர் அறிவித்துள்ள நூற்றா ண்டு விழா செயல் திட்டங்கள் செம்மை  பெற, ‘செயலாக்கக் குழு’ அமைப்பும் முக்கியம்! செய்யப்படவேண்டியவை வெறும் விழாக்கோலம் தாண்டி, புதிய எழுச்சியை உருவாக்கவும், சாதி  - தீண்டாமை ஒழிப்புக்குத் தூண்டுத லாகவும், பல புதிய சமூகப் புரட்சி சட்டங்களையும், வைக்கம் நூற்றா ண்டு காலத்தில் முதலமைச்சர் செய்ய வேண்டும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்திட உள்ள கேரள முதலமைச்சர் தோழர் பினராயி  விஜயன் அவர்களை யும், கேரள அரசையும் மனதாரப் பாராட்டுகிறோம்.