புதுதில்லி, அக்.15- மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக் கில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் விடுதலைக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராக பணிபுரிந்து வந்தவர் ஜி.என். சாய் பாபா. இவரை, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட் டின் பேரில், கடந்த 2014-ஆம் ஆண்டு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மோடி அரசு கைது செய்தது. மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் சாய் பாபா நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் ஜி.என்.சாய்பாபா மட்டுமன்றி, பத்திரிகையாளர் ஒரு வர், பல்கலைக்கழக மாணவர்கள் என மொத் தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம், மாவோயிஸ்ட் தொடர்புகள் மற்றும் நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பத்திரி கையாளர், தில்லி பல்கலைக்கழக மாண வர், பேராசிரியர் ஜி.என். சாய்பாபா என மொத் தம் 6 பேரையும் குற்றவாளிகள் என அறி வித்து தீர்ப்பளித்தது. அவர்கள் அனைவரும் நாக்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட னர். இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் சாய்பாபா உள்ளிட்ட 6 பேரும் மேல்முறையீடு செய்த னர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு, சிறையிலேயே உயிரிழந்த ஒருவரைத் தவிர, பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள் ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து வெள்ளி யன்று உத்தரவிட்டது. இதனால், 5 பேரும் விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இவர் களின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சனிக்கிழமை விடுமுறை என்ற போதும் அவ சர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 பேரின் விடுதலைக்கு தடை போட்டுள்ளது.