புதுதில்லி, ஜூலை 24 - மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கிய அன்றே இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். நாடாளுமன்றத்தின் வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, மணிப்பூர் விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று விதி எண் 176, 193 மற்றும் விதி எண்: 267-இன் கீழ் நோட்டீஸ் களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கினர். ஆனால், நாடாளுமன்றம் கூடியது முதலே, பிரதமர் நரேந்திர மோடி, மணிப் பூர் விவகாரம் குறித்து பதிலளிக்க மறுத்து ஓடி ஒளிவதால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. ஜூலை 20, 21, ஆகிய இரண்டு நாட்கள் அவை நடவடிக் கைகள் முற்றிலுமாக முடங்கின. இந்நிலையில், திங்களன்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் மணிப்பூர் விவகாரத்தைக் கிளப்பி, பிரதமரை பதிலளிக்குமாறு வலியுறுத் தினர்.
மாநிலங்களவை கூடியதும் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒன்றிய அரசு தயார்” என பேசினார். ஆனால், பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு அவைத்தலைவரையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதே மக்களவையிலும் அமளி ஏற்பட்டதால், அவையை 12 மணி வரை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர் பாக விவாதிக்கப்படும் என கூறினார். பின்னர் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் தொடங்கின. அப்போதும் பிரதமர் பதிலளிக்கக் கோரி, எதிர்க் கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அவையின் மையப்பகுதிக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்.
இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் பியூஷ் கோயல் ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மா னத்தை நிறைவேற்றிய மோடி அரசு, எஞ்சியிருக்கும் கூட்டத்தொடர் முழு வதும் சஞ்சய் சிங்-கை இடைநீக்கம் செய்தது. அத்துடன் அவை நடவடிக்கை களையும் பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்தார். பிற்பகல் 3 மணியளவில் மாநிலங்களவை கூடியபோது, ஆத் ஆத்மி எம்.சி. சஞ்சய் சிங் அவைக்கு வந்தார். அப்போது, அவரை அவையை விட்டு வெளியேறுமாறு, மாநிலங்கள வைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார். இதனால், அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. முன்னதாக மக்களவை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் கூடியபோது, பிரதமரைப் பதிலளிக்குமாறு கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங் களைத் தொடர்ந்தனர். இந்தக் கூச்சல் அமளிக்கு இடையிலேயே 3 மசோதாக் களை மோடி அரசு அமல்படுத்தியது. “அரசாங்கம் விவாதத்திற்கு தயாராக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் விவாதத்தை நடத்த அனுமதிக்க வில்லை? என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அமித்ஷா கூறிக்கொண்டார். இதன்பின்னணியில் நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் செவ்வாய்க் கிழமை காலை 11 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன.
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவை களிலும் பிரதமர் நரேந்திர மோடி பதி லளிக்க வலியுறுத்தி, 26 எதிர்க்கட்சி களை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட் டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.