states

img

மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க பாஜக திட்டம்

மகாராஷ்டிராவில் இருந்து மும்பை யை பிரிக்க பாஜக திட்டமிட்டுள் ளது என சிவசேனா தலைவர் உத்தவ்  தாக்கரே குற்றம் சாட்டியுள் ளார்.  மகாராஷ்டிரா வில் உள்ள 288 தொ குதிகளுக்கு ஒரே  கட்டமாக புதன் கிழமை (நவம்பர் 20)வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் மகாராஷ்டிராவில் திங்களன்று பிரச்சா ரம் ஓய்ந்தது.  இந்நிலையில், கடைசி நாளில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் அங்கம்  வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவ ரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மும்பையில் நடைபெற்ற பிரச்சா ரக் கூட்டத்தில் பேசுகையில்,”பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மகா ராஷ்டிராவை மீண்டும் கைப்பற்ற மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மும்பை யை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கும் சதியை நிகழ்த்தவே  திட்டமிட்டுள் ளார்கள். மகாயுதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரவிருக்கும் நாட்களில் மும்பை நகரம் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்கும் தந்திரம் உண் மையானது. நாட்டின் பெருநகரப் பகு தியை மேம்படுத்துவதற்கான நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் மும்பை மாநகராட்சியின் முக்கியத்துவத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதன் மூலம் மும்பையை மகாராஷ்டிராவிலி ருந்து பிரிக்கும் சூழ்ச்சியை நிகழ்த்த பாஜக கூட்டணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை நாங்கள் ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம். தான் வளர்ச்சிக்கு எதி ரானவன் அல்ல, ஆனால் அழிவுக்கு எதி ரானவன். மகாராஷ்டிராவைக் கொள்ளை யடிக்க அனுமதிக்காததால் சிவசேனா பிளவுபட்டது” என அவர் கூறினார்.