states

img

“மோடியின் பையை தேர்தல் ஆணையம் சோதிக்குமா?”

மும்பை மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர் தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி பயத்தில் பாஜக தேர்தல் ஆணையம், அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பா ளர்களுக்காக கருப்பு பணம் நிறைந்த சூட்கேஸ்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.  இந்த புகாரை திசை திருப் பும் விதமாக யவத்மால் மாவட்டம் வானியில் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற போது, உத்தவ் தாக்கரே கொண்டு சென்ற பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே மீது சோதனை நடத்துவதா? என எம்விஏ கூட்ட ணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சா ரத்தின் பொழுது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “மோடியின் பையை தேர்தல் ஆணையம் சோதிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எனது ஹெலி காப்டர் வானியை அடைந்த பிறகு, எனது பைகள் பரிசோ தனை செய்யப்பட்டன. இதற் காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத் தின் அதிகாரிகள் இதே போல  தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பு கிறேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் ஆளும்கட்சியை சேர்ந்த மூத்த  தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் இதே போன்று ஆய்வு செய்யுமா? என்று தான் கேட்கிறேன்” என அவர் கூறினார்.