ஹைதராபாத், டிச.29- ஒன்றிய அரசு தற்போது மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கி வரும் மாதம் முந்நூறு ரூபாய் என்பதை கடும் ஊனத் துக்கு ரூ.5 ஆயிரம், இதர மாற்றுத்திற னாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி 2023 மார்ச் 15 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில் டிசம்பர் 26 முதல் 28 வரை நடந்த ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ஒன்றிய அரசு வெறும் 300 ரூபாயை 10 சதவிகிதத்துக்கும் குறை வான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. மாற்றுத்திற னாளிகள் உரிமைச்சட்டம் 2016 இல் கூறப் பட்டுள்ளதற்கு மாறான ‘கண்ணியக் குறைவான’ அணுகுமுறையாகும். எனவே கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வரை மனவளர்ச்சி குன்றியோர், கடும் ஊனம், உள்ளிட்ட பிரிவினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம், சாதா ரண ஊனத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அனைவருக்கும் வழங்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை 2007 ஆம் ஆண்டு நடத்திய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த சர்வதேச மாநாட்டில் இந்திய அரசும் பங்கேற்று கையெழுத்திட்டுள்ளது. என்பிஆர்டி நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2014 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை சமர்ப்பித்தது. விவாதித்து குறைகளைக் களைந்து சட்டமாக்க வேண்டும் என என்பி ஆர்டி வலியுறுத்தியது. அதன்படி நிலுவையில் இருந்த இந்த மசோதா வை சட்டமாக்க வலியுறுத்தி 2015 மற்றும் 2016 இல் நாடு தழுவிய போராட்டங் களை என்பிஆர்டி நடத்தியது. அதன் பிறகே சட்டமாக்கப்பட்டது.
தடையற்ற சூழல் உறுதிமொழி
எனினும் சட்ட அமலாக்கத்துக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதன் காரணமாக 5 ஆண்டுகளில் தடையற்ற சூழல் ஏற்படுத்தப்படும் என்கிற சட்டப்பூர்வ மான உறுதிமொழிகூட நிறைவேற்றப் படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வில்லை. சிறப்புப் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், பயிற்று நர்கள், இயன்முறை பயிற்சி, பேச்சு, செயல்முறை, சைகை மொழி வல்லு நர்கள் இல்லை. இது எதிர்கால தலை முறையினரையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. நாடு முழுவதிலிருந்தும் பெருந்திரளான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்குமாறு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
25 சதவிகிதம் கூடுதல் பயன்
மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 பிரிவு 37, எந்த ஒரு திட்டத்திலும் 25 சதவிகிதம் கூடுதல் பயன்களை மாற்றுத்திறனாளி கள் பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. அதன்படி உடனடியாக நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு 125 நாட்கள் பணி வழங்க வேண்டும். பொதுவாக வேலை நாட்களை 200 ஆக அதிகரித்து சம்பளத்தையும் கூட்ட வேண்டும். தினமும் புகைப்படம் எடுத்து வருகை யை உறுதி செய்யும் நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்திய ரயில்வே மாற்றுத்திற னாளிகளுக்கான உரிமைகளை படிப்படியாக பறிப்பதை கைவிட வேண்டும். பார்வை, பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவிகி தம் இருந்தால்தான் ரயில்வே சலுகை கட்டண அட்டை வழங்கும் பாகு பாடு நீக்கப்பட வேண்டும். வழக்கமான வற்றைக்கூட சிறப்பு ரயில் என குறிப்பிட்டு சலுகை கட்டண பயணம் தடுக்கப்படுகிறது. வந்தேபாரத், தேஜாஸ், டொரண்டோ போன்ற ரயில்களில் சலுகை கட்டண பயணம் மறுக்கப்படுகிறது. இந்த ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்படுவ தில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பை அப்பட்டமாக நிராகரிக் கும் இதுபோன்ற நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும். பன்னோக்கு அடையாள அட்டை அனைவருக்கும் விரைவாக வழங்கி அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டையை பயன்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். ஆதார் அட்டை வழங்கப்பட்டதுபோல் வட்டார அளவில் முகாம்கள் நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.