states

தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறந்திடுக!

பெ.சண்முகம் வலியுறுத்தல்

பள்ளிபாளையம், ஜன.4- தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத வகையில், நடப்பாண் டில் 22 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதுதான் நெல் சாகுபடி உச்சபட்ச காலகட்ட மாக உள்ளது. ஆகவே, நெல்  உற்பத்தி பரப்பளவு அதிகரித் துள்ள நிலையில், அனைத்து நெல்  லையும் கொள்முதல் செய்யக் கூடிய வகையில், தமிழ்நாடு அர சாங்கம் தேவையான இடங்களில் உடனடியாக கொள்முதல் நிலை யங்களை திறக்க வேண்டும். கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக கொண்டு வைக்கப்படாத நிலைமை என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. கொள்முதல் செய்  யப்படும் நெல் முழுவதும் பாது காப்பாக கிடங்குகளில் வைப்ப தற்கான ஏற்பாடுகளையும் அர சாங்கம் மேற்கொள்ள வேண்டும்

முதல்வர் தலையிட்டு  தீர்வு காண்க!

திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தெரியாமலேயே, விவசாயி கள் பெயரில் ஆலை முதலாளிகள், மோசடியாக தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் கடன் பெற்று,  விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்துள்ளனர். விவசாயி கள் அனைத்து மட்டத்திலும் புகார் கொடுத்த பிறகும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.  அந்த ஆலை முதலாளிகளை பாது காக்கும் முறையில் அரசின் அணு குமுறை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் கொடுத்து வந்த கரும்பிற்கு இது வரையிலும், பாக்கி பணம் கொடுக்  கப்படவில்லை. இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் 35 நாளாக  இரவு, பகலாகப் போராடி வரு கின்றனர். மாநில வேளாண்துறை அமைச்சர் பேசியபிறகும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, தமி ழக முதல்வர் தலையிட்டு, இப்  பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும்.

விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு

ஒன்றிய அரசு விமான நிலை யம், தேசிய நெடுஞ்சாலை என  விவசாய நிலத்தை கேட்கிறது.  மாநில திமுக அரசு ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையில், விவ சாயிகளின் அனுமதியை பெறா மல் நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,  பல இடங்களில் அதிகாரிகள் காவல் துறையினரை பயன் படுத்தி, விவசாயிகளை அச்சு றுத்தி நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங் கள் வாழ்நாள் உழைப்பை, பரம்  பரை சொத்தை இத்தகைய திட் டங்களுக்காக இழக்கிறபோது, வாழ்நாள் முழுவதும் அவர்கள் வாழக்கூடிய வகையில், கூடுத லான இழப்பீட்டை வழங்க வேண்  டும். அதேசமயம் நில கையகப் படுத்தும் சட்டம் 2013-ன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்,  நிலத்துக்குரிய இழப்பீடு எவ்வ ளவு என தீர்மானிக்கலாம் என அதி காரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாய நிலத்தை இழக்கும் குடும்பத்தினர் எவ்வளவு இழப்பை சந்திப்பார்கள் என்பதை கணக்கில் கொண்டு கூடுதலான இழப்பீடு வழங்குவதற்கு பதி லாக, நிர்வாகத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர்கள் செயல் படும் போக்கு அதிகரித்துள்ளது.  கேரள மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலத்தை கைய கப்படுத்தும் போது, ஒரு ஏக்க ருக்கு ரூ.35 கோடி இழப்பீடு வழங்  கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்  டில் பகுதிக்கு பகுதி வித்தியாச மாகவும், அடிமாட்டு விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப் பட்டும், குறைந்த இழப்பீடு வழங்  கப்படும் போக்கு கண்டனத்திற் குரியது.  இந்த போக்கு தொடர்ந்தால்  தமிழகத்தில் எத்தகைய திட்  டத்தையும் தமிழக அரசால், நிறை வேற்ற முடியாது. எனவே, நிலத்தை  இழக்கக்கூடிய விவசாயியின் வாழ்வாதாரமும், எதிர் கால வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில், கூடுதல் இழப்பீட்டை நிர்ணயிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல் வர் அறிவுறுத்த வேண்டும்.

நெல்லுக்கு  ரூ.2500 வழங்குக!

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500  வழங்குவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித் தது. இந்தியாவிலேயே வேறு எந்த  மாநிலத்திலும் இல்லாத வகை யில் கூடுதல் தொகையை (ஒரு  குவிண்டால் ரூ.2,850) கேரளம்  வழங்கி வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் மாநில அரசாங்கத்தின் ஊக்கத்தொகையும் சேர்த்து ரூ. 2,115, ரூ.2,140 என்கிற வகையில் தான் இருந்து வருகிறது. விவ சாய இடுபொருட்கள் விலை உயர்வு, உற்பத்திச் செலவு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு, நடப்  பாண்டே நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து ஆண்டுதோறும் நடை முறைப்படுத்தப்பட்டு வரு கிறது. வேளாண் நிதிநிலை அறிக்  கைக்கு முன்பாக, விவசாயி களின் கருத்துக்களை கேட்டு, நிதி நிலை அறிக்கையை தயாரிப்பு  செய்வது என்கிற ஒரு நல்ல அணு குமுறையை திமுக அரசு கடைப்  பிடித்து வருவது பாராட்டுக்குரி யது. இருந்தாலும் அதில் விவசாயி கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்  யும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும். 

நதிகள் இணைப்பு

பல மாவட்டங்கள் இன்னமும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்  கிறது. நீண்ட காலத்திற்கு முன்  பான நதிகள் இணைப்புத் திட்டங் கள் கூட, நிறைவு பெறாமல் உள்  ளது. ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இது போன்ற பிரச்சனைகளில் தீவிர  கவனம் செலுத்துவதன் மூலமாக கூடுதலான பரப்பளவில் விவ சாயத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாக மாறும். ஐ.நா.சபை சிறுதானிய ஆண்  டாக நடப்பாண்டை அறிவித்துள் ளது. சிறுதானிய உற்பத்தி கொள் முதல் விற்பனை சம்பந்தப்பட்ட விஷயத்தில், வேளாண்மை திட்டத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.