பாசிசத்தை தோற்கடித்த 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவோம்
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத் தின் அகில இந்திய நிர்வா கிகள் கூட்டம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் மார்ச் 1, 2 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் தலை வரும், உலக சமாதான கவுன்சி லின் தலைவருமான பல்லப் சென் குப்தா தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலா ளர் ஹர்சந் சிங் இதுவரை நடை பெற்ற வேலைகள் மற்றும் நடை பெற்ற இயக்கங்கள் குறித்து அறிக் கையை முன் வைத்தார். தொடர்ந்து அகில இந்திய சமா தான ஒருமைப்பாட்டு கழகம் எதிர் காலத்தில் மேற்கொள்ள வேண் டியநடவடிக்கைகள், இயக்கங் கள், அகில இந்திய மற்றும் உலக அள விலான அரசியல் நிலைமைகள், பாலஸ்தீனப் பிரச்சனை, ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க குடியர சுத் தலைவர் டொனால்டு டிரம்பின் மனித உரிமை மீறல்கள், ஆக்கிர மிப்பு நடவடிக்கைகள், சிரியா மற்றும் வங்கதேசத்தில்ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள், இந்தியா - சீனா உறவுகள், பல துருவ உல கிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் போன்றவை குறித்து பல்லப் சென் குப்தா தனது கருத்துக் களை முன்வைத்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலி ருந்து அகில இந்தியச் செயலா ளர் ஐ.ஆறுமுகநயினார், அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கலந்து கொண்டனர். மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீத்தாராம் யெச்சூரியின் நினைவு நாளை நாடு முழுவதும் கடைப்பிடிப்போம்!
1.அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவிற்கு பொருளாதார ரீதியாக உதவிட வேண்டும்.
2.இந்தியா - வியட்நாம் நட்புறவு பண்பாட்டு கலை விழாவை இந்த ஆண்டு ஒடிசா மற்றும் ஆந்திரா இணைந்து நடத்திட வேண்டும்.
3. அணு ஆயுதங்களுக்கு எதிரான ஸ்டாக்ஹோம் அறிக்கை உலக சமாதான கவுன்சிலால் மார்ச் 19,1950இல் வெளியிடப்பட்டது. அதன் 75ஆவது ஆண்டு தினத்தை நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தி கடைப்பிடித்திட வேண்டும்.
4.பாண்டூங் மாநாடு 1955இல் ஏப்ரல் மாதம் 18 முதல் 24 வரை நடை பெற்றது மற்றும் அணிசேரா இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வின் 70ஆம் ஆண்டு விழாவை வரும் ஏப்ரல் 18 முதல் 25 வரை நாடு முழுவதும் கொண்டாடிட வேண்டும்.
5.பாசிசத்தை தோற்கடித்த 80ஆவது ஆண்டு தினத்தை மே 9 அன்று கொண்டாடிட வேண்டும்.
6. ஐரோப்பிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மனித உரிமை களை பாதுகாத்தல் தொடர்பாக 1975 ஆகஸ்ட் 1 அன்று ஹெல்சிங்கி இறு திச் சட்டம் மற்றும் மேற்கத்திய - கிழக்கத்திய நாடுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் 50ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடிட வேண்டும்.
7.புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கொண்டாடிட வேண்டும்.
8. ஹிரோஷிமா - நாகஷாஹி மீது அமெரிக்காவால் அணுகுண்டுகள் வீசப் பட்டத்தின் 80ஆவது ஆண்டு விழாவை கடைப்பிடித்திட வேண்டும்.
9. ஐக்கிய நாடுகள் சபை 24 அக்டோபர் 1945இல் தொடங்கப்பட்டதின் 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிட வேண்டும்.
10. சீத்தாராம் யெச்சூரியின் நினைவு நாளை (செப்., 12) நாடு முழுவதும் கடைப்பிடித்திட வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் ஏகமனதாக இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.