states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

காசா மீது இஸ்ரேல் ஈவிரக்கமற்ற முறையில் வான்வழியாகவும் தரைவழியாகவும் குண்டுமழை பொழிந்து வருகிறது. 6,500க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சர்வதேச மனிதநேய விதிகளை, சட்டங்களை அப்பட்டமாக மீறி நடந்து வருகிறது. இந்தக் கொடிய தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்து  செவ்வாயன்று பாதுகாப்புக் கவுன்சிலில் உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேல், ஐ.நா. பொதுச் செயலாளரை பதவி விலகு மாறும், அவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார் என்றும் கூறியுள்ளது. ஐநா பொதுச் செயலாளரை யே மிரட்டுவதும், ராஜினாமா செய்யச் சொல்வதும் முன்னெப்போதும் இல்லாதது; எந்தவிதத்திலும் ஏற்க முடியாதது. இஸ்ரேலே உடனே போரை நிறுத்து!