2005-இல் குஜராத் மாநிலத் தில் மோடி முதல்வராக வும், அமித் ஷா உள் துறை அமைச்சராக இருந்த காலகட்டத் தில் சோராபுதீன் உள்ளிட்ட பல்வேறு போலி என்கவுண்டர் சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தில் தோரா யமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்த நிலையில், தற்போதைய நாட் டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ மூலம் அவர் விடு விக்கப்பட்ட நிலையில், இந்த விவகா ரத்தை சுட்டிக்காட்டி கடந்த 2018 மே 8 அன்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,”பாஜக நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாகக் கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரை கட்சியின் தலைவராக (2018இல் பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா இருந்தார்) வைத்திருக்கிறது” என்று கூறினார். இதனை அரசியல் ஆதாய பொரு ளாக எடுத்துக்கொண்ட பாஜக, விஜய் மிஸ்ரா என்ற நிர்வாகி (பாஜக) மூலம் உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் காவல்நிலையத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. வழக்கு சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சமீபத்தில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மன் தொடர்பாக செவ்வா யன்று சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத் தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரா னார். வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் யாதவ் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ராகுலுக்கு ஜாமீன் ராகுல் காந்தியின் 2-ஆம் கட்ட “இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத் திரை” தற்போது உத்தரப்பிரதேச மாநி லத்தில் சென்று கொண்டு இருக்கிறது. சுல்தான்பூரும் உத்தரப்பிரதேச மாநி லத்திற்குள் உள்ளதால் அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல் காந்தி செவ் வாயன்று யாத்திரைக்கு சிறிது நேரம் இடைவேளை கொடுத்து, சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு சென்றார். யாத்திரை யில் பங்கேற்றவர்களும் சுல்தான்பூர் மக்களும், ராகுலோடு சேர்ந்து நீதி மன்றத்திற்குள் நுழைந்தனர். ராகுல் காந்தி விசாரணை முடிந்து வெளியே வரும் வரை நீதிமன்ற வளாகத்திற் குள்ளேயே இருந்தனர். அவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு, சுல்தான்பூரில் ஊர்வலமாக ராகுல் காந்தி மீண்டும் சென்றார். சுல்தான்பூர் பாஜகவின் கோட்டையாக கருதுப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.