லக்னோ, பிப்.26- நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனி தர்களை அடித்துக் கொல்லும் சம்ப வங்கள் அதிகரித்தன. நாடு முழுவதும் பல்வேறு மாநில பாஜக அரசுகள் பசுவதைத் தடைச் சட்டங்களை கொண்டுவந்தன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் ஆதித்ய நாத் பசுவதை தடை தொடர்பான தடா லடியான பல உத்தரவுகளை பிறப் பித்தார். இதனால், பயன்பாடற்ற மாடு களை விவசாயிகளால் விற்க முடி யாத நிலை ஏற்பட்டது. மேலும் அவற்றை பராமரிக்கவும் முடியாததால், தெருக் களில்விட ஆரம்பித்தனர். இவ்வாறு தெருக்களில் விடப்பட்ட மாடுகள், தங்களின் இரைக்காக வயல் வெளிகளில் புகுந்து பயிர்களை மேய ஆரம்பித்தன. நடந்து செல்வோர் மாடுகள் முட்டி உயிரிழப்பதும் அதி கரித்தது. இது முக்கியப் பிரச்சனையான உருவெடுத்த நிலையில், தெருக்களில் விடப்பட்ட மாடுகளை பராமரிக்க, ஆங்காங்கே மாட்டுத் தொழுவங் களை அமைக்க உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதன் படி உ.பி.யில் 5,617 பசுப் பாதுகாப்பு மையங்களில் 8 லட்சம் மாடுகள் சேர்க் கப்பட்டன. ஆனால், விவசாயிகளால் கை விடப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 16 லட்சம் என்ற நிலையில், அதில் சரி பாதி பசுக்களையே ஆதித்யநாத் அர சால் பராமரிக்க முடிந்தது. எஞ்சிய 8 லட்சம் மாடுகள் வழக்கம்போல தெருக்களில் சுற்றித் திரியவும், விவசாயிகளின் சாகுபடிகளில் புகுந்து பயிர்களை மேயவுமாக பிரச்சனை களை ஏற்படுத்தி வந்தன. ஒருகட்டத்தில், பசுக்களை பொது மக்கள் தத்தெடுக்கும் திட்டத்தையும் முதல்வர் ஆதித்யநாத் அறிமுகப் படுத்தினார். ஆனால், இவ்வாறு தத்தெடுத்தவர்களின் எண்ணிக்கை யும் பத்தாயிரத்துடன் நின்று விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பசுக்கள் பாது காப்புக்காக அரசு ரூ.355 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி சூறையாடியது. ஆனாலும் பயனில்லை. இந்நிலையில்தான், கைவிடப் பட்ட பசுக்கள் பயிர்களை மேய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற் படுத்துவது, உ.பி. தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது.
பசுக்கள் விவகாரத்திற்கு முதல்வர் ஆதித்யநாத் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். நான்காம் கட்டத் தேர்தல் நடை பெற்ற பாந்தா மாவட்டத்தில் உள்ள பூர்வா கிராம மக்கள் பசுக்கள் பிரச்ச னையைக் காட்டி தேர்தலையே புறக்க ணித்தனர். உ.பி.யில் பசுக்களின் பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் மோடியே அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை, இந்த தேர்தல் புறக்கணிப்பு ஏற்படுத்தியது. தற்போது, கைவிடப்பட்ட பசுக் களைப் பராமரிப்பதற்கு விவசாயி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.900 முதல் ரூ.1000 வரை உயர்த்தி வழங்கப்படும் என்று ஆதித்யநாத் அறிவித்துள்ளார். எனி னும் விவசாயிகளுக்கு இது திருப்தி யைத் தருவதாக இல்லை. அவர்கள் பாஜக மீது மிகுந்த கோபத்துடனே உள்ளனர். இந்த கோபம் தேர்தலி லும் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.